இந்த நடிகைக்கு புரணி பேசுவது அவ்ளோ பிடிக்குமாம்!
மும்பை: பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு பிற நடிகர், நடிகைகள் பற்றி புரணி பேசுவது என்றால் மிகவும் பிடிக்கும் என்று அவரது நாத்தனாரும், நடிகையுமான சோஹா அலி கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சோஹா கூறுகையில்,
கரீனா பெரிய நடிகையாக இருந்தாலும் தலைக்கனம் இல்லாதவர். எனக்கு கரீனா மீது மிகவும் மரியாதை உள்ளது. நானும் கரீனாவும் சேர்ந்தால் பிறரைப் பற்றி, படிப்பிடிப்புக்கு வெளியே நடப்பது பற்றி நிறைய புரணி பேசுவோம். நாங்கள் எப்பொழுதுமே புரணி பேசுவோம். ஆனால் என்ன பேசுவோம் என்பதை கூற மாட்டேன் என்றார்.
கரீனா கபூர் சைஃப் அலி கானை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகும் பிசியான நடிகையாகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications