Don't Miss!
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Automobiles எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
செல்ஃபியை அடுத்து வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவும் நடிகை ராதிகா ஆப்தேவின் நிர்வாண வீடியோ
மும்பை: நடிகை ராதிகா ஆப்தே நிர்வாணமாக நடித்த குறும்படக் காட்சி சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.
தோனி படம் மூலம் கோலிவுட் வந்தவர் நடிகை ராதிகா ஆப்தே. கார்த்தி நடித்த ஆல் இன் அழகுராஜா படத்திலும் நடித்திருந்தார். அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.
ராதிகா ஆப்தே அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
நிர்வாண செல்ஃபி
அண்மையில் தான் ராதிகா ஆப்தேவின் நிர்வாண செல்ஃபி படங்கள் வாட்ஸ்ஆப்பில் பரவியது. ஆனால் அந்த புகைப்படங்களில் இருப்பது தான் அல்ல என்றும், தன்னைப் போன்று உள்ள யாரோ ஒருவர் என்றும் ராதிகா தெரிவித்திருந்தார்.
வீடியோ
நிர்வாண செல்ஃபியால் ஏற்பட்ட பரபரப்பு அடங்கும் முன்பு ராதிகா மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப்பின் குறும்படத்தில் நடித்துள்ளார். அந்த குறும்படத்தில் அவர் நிர்வாணமாக வரும் காட்சி சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.
குறும்படம்
20 நிமிடங்கள் ஓடும் அந்த குறும்படம் இன்னும் ரிலீஸாகவில்லை. சர்வதேச மார்க்கெட்டில் மட்டும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் அந்த குறும்படத்தில் இருந்து ஒரு காட்சி கசிந்துள்ளது.
அனுராக் கஷ்யப்
குறும்பட காட்சி கசிந்துள்ளதை பார்த்து இயக்குனர் அனுராக் கஷ்யப் கோபமும், அதிர்ச்சியும் அடைந்தார். உடனே இது குறித்து அவர் மும்பை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வீடியோவை கசியவிட்ட மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கவனம்
ராதிகா ஆப்தே தனது ஆடையை தூக்கி மர்ம உறுப்பை காட்டும் வகையில் அந்த காட்சி எடுக்கப்பட்டது. அந்த காட்சியை மிகவும் கவனத்துடன் எடுத்தோம். பெண் குழுவை வைத்து தான் அந்த காட்சியை படமாக்கினோம் என்று அனுராக் தெரிவித்துள்ளார்.
ராதிகா
என்ன ராதிகா, இப்படி ஒரு வீடியோ கசிந்துள்ளதே என்று அவரிடம் கேட்டதற்கு, அந்த வீடியோவை வெளியிட்ட நபரை கைது செய்யும் வரை இது குறித்து நான் எதுவும் கூற மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.