Don't Miss!
- News தோளை தொட்ட சு.வெங்கடேசன்.. டக்னு திரும்பிய டாக்டர் சரவணன்.. பூரித்த மதுரை.. சபாஷ், இது போதுமே நமக்கு
- Automobiles ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
தமிழ்ப் படங்களில் நடிக்க அஞ்சலிக்கு தடை?
ஊர்சுற்றிப் புராணம் என்ற படத்தில் நடிக்க மறுப்பதால், தமிழ்ப் படங்களில் நடிக்க அஞ்சலிக்கு தடை விதிக்க இயக்குநர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மு களஞ்சியம் இயக்கும் படம் இந்த ஊர்சுற்றிப் புராணம். அதில் சில தினங்கள் நடித்த பிறகு, அஞ்சலி தன் சித்தியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக ஹைதராபாத் கிளம்பிவிட்டார்.
சென்னைக்கே அவர் வரவில்லை. மேலும் தனது இந்த நிலைக்கு முக்கிய காரணம் மு களஞ்சியம்தான். அவரும் தன் சித்தியும் திட்டமிட்டு தன் சொத்துக்களை அபகரிக்க முயற்சித்தனர் என பகிரங்க குற்றம்சாட்டினார் அஞ்சலி.
இன்னும் அஞ்சலிக்கு அவர் சொத்துக்களும் பல கோடி ரூபாயும் திரும்பக் கிடைக்கவே இல்லையாம். வீடு, பணம் அனைத்தையும் இழந்து, ஹைதராபாதில் தஞ்சமடைந்திருக்கும் தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டி வருகிறார் அஞ்சலி.
தன் படத்தில் நடிக்கும் வரை அஞ்சலி சென்னையில் கால் வைக்கவே விடமாட்டேன் என்றும், வழக்குத் தொடருவேன் என்றும் அஞ்சலியை மிரட்டி வருகிறார் களஞ்சியம்.
ஆனால், களஞ்சியத்தின் மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன். புதிய தமிழ்ப் படங்களில் நடிக்கத் தயார் என்று கடந்த வாரம் கூறியிருந்தார் அஞ்சலி.
இந்த நிலையில், இயக்குநர் சங்கத்தை வைத்து அஞ்சலி மீது தடை கொண்டு வர களஞ்சியம் முயற்சி செய்தார்.
களஞ்சியம் சொன்னதைக் கேட்டு இயக்குநர் சங்கமும் அஞ்சலி மீது தடை விதிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. சங்கத்தின் தலைவர் விக்ரமன், நிர்வாகிகள் செல்வமணி உள்ளிட்டோர் களஞ்சியத்துக்கு ஆதரவாக இப்படியொரு முடிவை எடுத்துள்ளார்களாம்.