Don't Miss!
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- News PAN எண் பழசு.. ரூ. 11 கோடியை உடனே கட்டுங்க.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
திகு திகு தியா!
கிளாமரை தலாகப் போட்டுத்தான் தமிழ் சினிமாவுக்கே வந்தார் தியா. நல்லபடியாகஎக்ஸ்போஸ் செய்தும் அவரால் தேற முடியவில்லை. நிறையப் படங்களில் நடித்துகிளாமர் நாயகியாக கோலோச்சலாம் என்று நினைத்த தியாவின் நினைப்பில் மண்ணைஅள்ளிப் போடும் விதமாக அவர் நடித்த ஒரு படம் உருப்படியாக ஓடவில்லை.
சரி குத்து விளக்காக மாறலாம் என்று நினைத்து சில படங்களில் நடித்தும் பார்த்தார்.அயகோ, அவையும் போணியாகவில்லை. இதனால் கடுப்பான தியா, பேசாமல்மலையாளத்தில் தனது அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்க முடிவு செய்து அந்தப்பக்கம் போனார்.
இதனால் அப்செட் ஆகியிருந்த தியாவுக்கு இப்போது தமிழில் ஒரு படம் வந்துள்ளது.படத்திற்குப் பெயர் செவன். சிந்து துலானியை வைத்து அலையடிக்குது என்ற கிளாமர்களியாட்டப் படத்தைக் கொடுத்த அதே காளிமுத்துதான், செவனையும் இயக்கப்போகிறார்.
அதென்னவோ காளிமுத்துவுக்கு கிளாமரான படங்களை மட்டும்தான் இயக்கத்தெரியும் போல. சிந்து துலானியை உரித்துக் காட்டி படம் எடுத்த காளிமுத்துஇப்போது நமீதாவை முழுக்க முழுக்க கிளாமர் நாயகியாகப் போட்டு இன்னொருபடத்தை இயக்கப் போகிறார்.
அதைத் தொடர்ந்து தியாவின் தீயான கவர்ச்சியில் செவன் படத்தையும் இயக்கப்போகிறார். பேசாமல் தனது பெயரை கிளாமர் முத்து என இவர் மாற்றிக் கொள்ளளாம்.
படத்தின் முதல் காட்சி முதல் முடியும் வரை தியாவின் கவர்ச்சியில் முத்துக்குளித்துள்ளதாம் கதை. படத்தோட கதை என்னவென்றால், அழகான ஒரு பெண்காவல் நிலையம் வருகிறாள். தன்னை சில ரவுடிகள் துரத்துவதாகவும்,காப்பாற்றுமாறும் கோருகிறாள்.
காவல் நிலையத்தில் இருக்கும் இன்ஸ்பெக்டரோ, தன்னை நாடி வந்த பெண்ணின்அழகில் மயங்கி சொக்கிப் போகிறார். நீ என்னைக் கல்யாணம் செய்து கொள் என்றுவற்புறுத்துகிறார்.
அப்படியே போகிறதாம் கதை. சதைப் பிடிப்பான இந்தக் கதையை படமாக்கும்போதுகிளாமர் இல்லாமல் எடுக்க முடியுமோ? அதனால் தான் படத்தை முழுக்க முழுக்ககிளாமராக உருவாக்குகிறாராம் காளிமுத்து. தியாவும் முடிந்தவரை கிளாமர் காட்டரெடியாக இருக்கிறாராம்.
இந்தப் படமாவது தியாவுக்கு திருப்பம் தருமா என்று பார்ப்போம்!