தியாவின் சந்தேகம் கோடம்பாக்கத்தில் தனது எதிர்காலம் குறித்து ரொம்பவே சந்தேகப்படும் தியா தெலுங்கு, மலையாம் பக்கமாக சான்ஸ் தேடஆரம்பித்துள்ளார்.தியாவை கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் ரசிகப் பெருமக்கள் மறக்கத் தொடங்கியுள்ளனர். பரதம் அறிந்த இந்த சென்னைப் பட்டண மயில், நடித்தது கொஞ்சப் படங்களே என்றாலும் கூட தனது எழிலான வனப்பினால்ரசிகர்களிடையே சீக்கிரமே ரீச் ஆனார். குறும்பு, ட்ரீம்ஸ் ஊத்திக் கொள்ள கற்க கசடற படமாவது தனக்கு பெரிய பிரேக்கைத் தரும் என்று நம்பியிருந்த தியாவின் நினைப்பில் பத்துலாரி மண் விழுந்து அவரை அப்செட் ஆக்கியது. அப்படத்தில் நடித்த யாருமே தேறவில்லை, லஷ்மி ராயைத் தவிர.இதனால் சற்றே மனம் தளர்ந்திருந்த தியாவைக் கூப்பிட்டு தனது கோடம்பாக்கம் படத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் ஜெகன்ஜி. புதியகீதை என்ற ஓடாத படத்தை இயக்கியவர்தான் இந்த ஜெகன்ஜி.முதல் படம் கவுத்தி விட்டாலும், திக்கித் திணறி ஜெகன்ஜி எடுத்துள்ள படம்தான் கோடம்பாக்கம். இதில் தியாதான் நாயகி. செகண்ட் ஹீரோயினாக தேஜஸ்ரீயும் இருக்கிறார். ஹீரோ நந்தா. படம் பூஜை போடப்பட்ட அன்றே, அட்டகாசமானகதை என்று கோலிவுட் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது கோடம்பாக்கம்.இதில் கதையுடன் கவர்ச்சியையும் கலந்து கிறங்கடித்திருக்கிறாராம் தியா. இப்படத்திற்கு தியா தரப்பிலிருந்து கொஞ்சம் போல பைனான்ஸ்செய்யப்பட்டிருப்பதாகவும் ஒரு பேச்சு உலவுகிறது. அந்த பைனான்ஸ் கூட தியாவுக்கு வேண்டிய ஒரு மல்டிநேசனல் நிறுவனத்தின் அதிகாரிதான் செய்தார் என்கிறார்கள்.அந்த நிறுவனத்தின் புராடெக்டுகளுக்காக மாடலிங் செய்யப் போனபோது அந்த அதிகாரியும் தியாவும் நெருக்கமாகிவிட்டார்களாம்.இந்தப் படத்தைத்தான் தியா ரொம்பவே எதிர்பார்த்திருந்தாலும், முழு அளவில் நம்பிக்கை இல்லை போலும்.இதனால் மலையாளத்திலும் தெலுங்கிலும் சான்ஸ் தேட ஆரம்பித்திருக்கிறார். தெலுங்கில் இளம் ஹீரோக்களைச் சந்தித்து தியா வீசியவலையில் ஒரு மீன் விழுந்துவிட்டதாம். கல்யாண் ராம் என்ற ஹீரோவின் படத்தில் தியாவுக்கு ஹீரோயின் சான்ஸ் கிடைத்துவிட்டது. அசத்யுது என்ற அந்தப் படத்திற்கு முதல் கட்டமாக பாடல்களை சூட் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். (படத்தை அப்புறம் எடுப்பார்களாம்,அது தான் தெலுங்கு ஸ்டைல்). பாடல் காட்சிகளில் தியா காட்டி வரும் கிளாமரைக் கண்டு புளாகாங்கிதம் அடைந்திருக்கிறார்களாம்இயக்குனரும் ஹீரோவும்.இந்த ஹூட்டிங் ஒரு பக்கம் நடக்கும்போதே அப்படியே வேறு தயாரிப்பாளர்களையும் சந்தித்து தனக்கு வாய்ப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார் தியா.அதே போல கடும் முயற்சிக்குப் பின் மலையாளத்தில் தனக்குக் கடைத்த மின்னல் என்ற படத்தில் நடித்துக் கொண்டே மேலும் படங்களுக்குமுயற்சித்து வருகிறார். அப்போ தமிழ்ல அவ்வளவு தானா?
கோடம்பாக்கத்தில் தனது எதிர்காலம் குறித்து ரொம்பவே சந்தேகப்படும் தியா தெலுங்கு, மலையாம் பக்கமாக சான்ஸ் தேடஆரம்பித்துள்ளார்.
தியாவை கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் ரசிகப் பெருமக்கள் மறக்கத் தொடங்கியுள்ளனர்.
பரதம் அறிந்த இந்த சென்னைப் பட்டண மயில், நடித்தது கொஞ்சப் படங்களே என்றாலும் கூட தனது எழிலான வனப்பினால்ரசிகர்களிடையே சீக்கிரமே ரீச் ஆனார்.
குறும்பு, ட்ரீம்ஸ் ஊத்திக் கொள்ள கற்க கசடற படமாவது தனக்கு பெரிய பிரேக்கைத் தரும் என்று நம்பியிருந்த தியாவின் நினைப்பில் பத்துலாரி மண் விழுந்து அவரை அப்செட் ஆக்கியது. அப்படத்தில் நடித்த யாருமே தேறவில்லை, லஷ்மி ராயைத் தவிர.
இதனால் சற்றே மனம் தளர்ந்திருந்த தியாவைக் கூப்பிட்டு தனது கோடம்பாக்கம் படத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர் ஜெகன்ஜி. புதியகீதை என்ற ஓடாத படத்தை இயக்கியவர்தான் இந்த ஜெகன்ஜி.
முதல் படம் கவுத்தி விட்டாலும், திக்கித் திணறி ஜெகன்ஜி எடுத்துள்ள படம்தான் கோடம்பாக்கம்.
இதில் தியாதான் நாயகி. செகண்ட் ஹீரோயினாக தேஜஸ்ரீயும் இருக்கிறார். ஹீரோ நந்தா. படம் பூஜை போடப்பட்ட அன்றே, அட்டகாசமானகதை என்று கோலிவுட் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது கோடம்பாக்கம்.
இதில் கதையுடன் கவர்ச்சியையும் கலந்து கிறங்கடித்திருக்கிறாராம் தியா. இப்படத்திற்கு தியா தரப்பிலிருந்து கொஞ்சம் போல பைனான்ஸ்செய்யப்பட்டிருப்பதாகவும் ஒரு பேச்சு உலவுகிறது. அந்த பைனான்ஸ் கூட தியாவுக்கு வேண்டிய ஒரு மல்டிநேசனல் நிறுவனத்தின் அதிகாரிதான் செய்தார் என்கிறார்கள்.
அந்த நிறுவனத்தின் புராடெக்டுகளுக்காக மாடலிங் செய்யப் போனபோது அந்த அதிகாரியும் தியாவும் நெருக்கமாகிவிட்டார்களாம்.
இந்தப் படத்தைத்தான் தியா ரொம்பவே எதிர்பார்த்திருந்தாலும், முழு அளவில் நம்பிக்கை இல்லை போலும்.
இதனால் மலையாளத்திலும் தெலுங்கிலும் சான்ஸ் தேட ஆரம்பித்திருக்கிறார். தெலுங்கில் இளம் ஹீரோக்களைச் சந்தித்து தியா வீசியவலையில் ஒரு மீன் விழுந்துவிட்டதாம். கல்யாண் ராம் என்ற ஹீரோவின் படத்தில் தியாவுக்கு ஹீரோயின் சான்ஸ் கிடைத்துவிட்டது.
அசத்யுது என்ற அந்தப் படத்திற்கு முதல் கட்டமாக பாடல்களை சூட் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். (படத்தை அப்புறம் எடுப்பார்களாம்,அது தான் தெலுங்கு ஸ்டைல்). பாடல் காட்சிகளில் தியா காட்டி வரும் கிளாமரைக் கண்டு புளாகாங்கிதம் அடைந்திருக்கிறார்களாம்இயக்குனரும் ஹீரோவும்.
இந்த ஹூட்டிங் ஒரு பக்கம் நடக்கும்போதே அப்படியே வேறு தயாரிப்பாளர்களையும் சந்தித்து தனக்கு வாய்ப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார் தியா.
அதே போல கடும் முயற்சிக்குப் பின் மலையாளத்தில் தனக்குக் கடைத்த மின்னல் என்ற படத்தில் நடித்துக் கொண்டே மேலும் படங்களுக்குமுயற்சித்து வருகிறார். அப்போ தமிழ்ல அவ்வளவு தானா?


Click it and Unblock the Notifications