சதை போடும் தியா தமிழ் சினிமாவில் இப்போதைக்கு நடிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம்தியா.எதிர்பார்த்த அளவுக்கு இங்கே நல்ல கேரக்டர்கள் கிடைக்கவில்லை என்பதுஒருபக்கம் கவலையைக் கொடுத்தாலும், கிளாமர் காட்டும் ரோல்களே தொடர்ந்துகிடைப்பதாலும் கடுப்பாகிப் போய் மலையாளப் பக்கம் இப்போது கவனத்தைத்திருப்பியுள்ளாராம் தியா.தியா நடிக்க கடைசிப் படம் கோடம்பாக்கம். அப்படம் சுமாராக ஓடி ஓரளவு வெற்றிப்படமாக கருதப்பட்டாலும் கூட அதில் நடித்த தியாவுக்கு வாய்ப்புகள் வந்துகுவியவில்லை.கோடம்பாக்கம் தனக்கு பெரிய பிரேக்கைத் தரும் என்று தியா ரொம்பவே நம்பினார்.ஆனால் கோலிவுட் கைவிட்டது மாதிரி கோடம்பாக்கம் படமும் உதவிசெய்யவில்லை.இந்த விசனத்தில் இருந்து வந்த தியாவைத் தேடி இரண்டு மலையாளப் படவாய்ப்புகள் வந்துள்ளனவாம். அதில் ஒன்று விருதுக்காக (அதாங்க.. படத்துல மழைஆரம்பிச்சு முடியிற வரை ஒருத்தரு கொடையோட நடந்துகிட்டே இருப்பாரே..)தயாரிக்கப்படும் படமாம்.இந்தப் படத்தில் மிக மிக குறைந்த சம்பளத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்தியா.படத்திற்காக கொஞ்சம் சதை போட வேண்டும் என்று இயக்குனர் கூறவே உடனேசரியென்று கூறி விட்ட தியா இப்போது கண்டதையும் வாயில் போட்டு உடம்பைஏத்தும் வேலையில் மும்முரமாக இறங்கியிருக்கிறார்.சதைப்பிடிப்பான படம் போல!அதேபோல போல இன்னொரு மலையாளப் படத்திலும் தியாவுக்கு முக்கியத்துவமானகேரக்டராம். இரண்டு படம் தனக்கு வெற்றியைத் தந்தால், தொடர்ந்து மலையாளப்படவாய்ப்புகள் நிறைய வந்தால் தமிழுக்கு டாட்டா காட்டி விடும் முடிவில்இருக்கிறாராம் தியா.தியாவுக்கு இப்போது நிறைய ஃப்ரீ டைம் (மலையாளப் படங்கள் சூட்டிங் இன்னும்தொடங்கவில்லை) இருப்பதால், பொழுதைப் போக்க தன்னைப் போலவே படுஃப்ரீயாக இருக்கும் லஷ்மி ராய், மதுமிதா ஆகியோரை சந்தித்து நீண்ட நேரம் கடலைபோட்டபடி இருக்கிறாராம்.இந்த கடலையின்போது இப்போதைய ஹீரோயின்களைப் போட்டு வறு வறுன்னுவறுத்து எடுக்கிறார்களாம் மூன்று பேரும். அத்தோடு பேப்பர்களில் படிக்கும் கிசு கிசுசெய்திகளையும் அனலைஸ் செய்து வம்படித்து பொழுதைக் கழிக்கிறார்களாம்.இப்படி பேசி நேரத்தை வீணடிப்பதை விட மலையாள ரசிகர்களைக் கவர என்னமாதிரியெல்லாம் தெறமை காட்டலாம் என்று யோசித்தால் தியாவுக்கு உபயோகமாகஇருக்குமே..
தமிழ் சினிமாவில் இப்போதைக்கு நடிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம்தியா.
எதிர்பார்த்த அளவுக்கு இங்கே நல்ல கேரக்டர்கள் கிடைக்கவில்லை என்பதுஒருபக்கம் கவலையைக் கொடுத்தாலும், கிளாமர் காட்டும் ரோல்களே தொடர்ந்துகிடைப்பதாலும் கடுப்பாகிப் போய் மலையாளப் பக்கம் இப்போது கவனத்தைத்திருப்பியுள்ளாராம் தியா.
தியா நடிக்க கடைசிப் படம் கோடம்பாக்கம். அப்படம் சுமாராக ஓடி ஓரளவு வெற்றிப்படமாக கருதப்பட்டாலும் கூட அதில் நடித்த தியாவுக்கு வாய்ப்புகள் வந்துகுவியவில்லை.
கோடம்பாக்கம் தனக்கு பெரிய பிரேக்கைத் தரும் என்று தியா ரொம்பவே நம்பினார்.ஆனால் கோலிவுட் கைவிட்டது மாதிரி கோடம்பாக்கம் படமும் உதவிசெய்யவில்லை.
இந்த விசனத்தில் இருந்து வந்த தியாவைத் தேடி இரண்டு மலையாளப் படவாய்ப்புகள் வந்துள்ளனவாம். அதில் ஒன்று விருதுக்காக (அதாங்க.. படத்துல மழைஆரம்பிச்சு முடியிற வரை ஒருத்தரு கொடையோட நடந்துகிட்டே இருப்பாரே..)தயாரிக்கப்படும் படமாம்.
இந்தப் படத்தில் மிக மிக குறைந்த சம்பளத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்தியா.
படத்திற்காக கொஞ்சம் சதை போட வேண்டும் என்று இயக்குனர் கூறவே உடனேசரியென்று கூறி விட்ட தியா இப்போது கண்டதையும் வாயில் போட்டு உடம்பைஏத்தும் வேலையில் மும்முரமாக இறங்கியிருக்கிறார்.
சதைப்பிடிப்பான படம் போல!
அதேபோல போல இன்னொரு மலையாளப் படத்திலும் தியாவுக்கு முக்கியத்துவமானகேரக்டராம். இரண்டு படம் தனக்கு வெற்றியைத் தந்தால், தொடர்ந்து மலையாளப்படவாய்ப்புகள் நிறைய வந்தால் தமிழுக்கு டாட்டா காட்டி விடும் முடிவில்இருக்கிறாராம் தியா.
தியாவுக்கு இப்போது நிறைய ஃப்ரீ டைம் (மலையாளப் படங்கள் சூட்டிங் இன்னும்தொடங்கவில்லை) இருப்பதால், பொழுதைப் போக்க தன்னைப் போலவே படுஃப்ரீயாக இருக்கும் லஷ்மி ராய், மதுமிதா ஆகியோரை சந்தித்து நீண்ட நேரம் கடலைபோட்டபடி இருக்கிறாராம்.
இந்த கடலையின்போது இப்போதைய ஹீரோயின்களைப் போட்டு வறு வறுன்னுவறுத்து எடுக்கிறார்களாம் மூன்று பேரும். அத்தோடு பேப்பர்களில் படிக்கும் கிசு கிசுசெய்திகளையும் அனலைஸ் செய்து வம்படித்து பொழுதைக் கழிக்கிறார்களாம்.
இப்படி பேசி நேரத்தை வீணடிப்பதை விட மலையாள ரசிகர்களைக் கவர என்னமாதிரியெல்லாம் தெறமை காட்டலாம் என்று யோசித்தால் தியாவுக்கு உபயோகமாகஇருக்குமே..


Click it and Unblock the Notifications