Don't Miss!
- News ஜெய் ஸ்ரீராம் போலோ.. "பிஸ்னஸ் மேன்" கையை தூக்கிய கேப்பில்! ரூ.36000 அபேஸ்! பாஜக பிரச்சாரத்தில் திக்
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ருஷ்டியைத் தடுக்காதீர்கள்- ஷ்ரியா வேண்டுகோள்!
கவர்ச்சிகரமான, வசீகரமான நடிகைகளில் ஒருவர் ஷ்ரியா. சினிமா மட்டுமல்லாமல் சமூகம் சார்ந்த விஷயங்களிலும் கூட ஆர்வம் அதிகம் கொண்டவர் ஷ்ரியா. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்வும் இவருக்கு அதிகம். சிறந்த நடனக்காரரான ஷ்ரியா, கதக் நடனத்தில் வல்லவர்.
வாழ்க்கையை இயல்பான போக்கில் எதிர்கொள்ளும் மனோபாவம் கொண்ட ஷ்ரியா, சல்மான் ருஷ்டி சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் சல்மான் ருஷ்டியைப் போன்ற மிகப் பெரிய இலக்கியவாதிகளை விலக்கி வைப்பது என்பது சற்றும் பொருத்தமில்லாத ஒன்றாகும். அவரது படைப்புகளை மட்டுமே பார்க்க வேண்டும். உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்கிறோம். ஆனால் மாற்றுக் கருத்துடைய ஒருவரை நாம் ஏற்க மறுக்கிறோம். ருஷ்டியின் இந்திய வருகைக்கு எதிர்ப்புக் கிளம்பியது தேவையில்லாதது, காரணமற்றது.
ருஷ்டியின் கருத்துக்களில் யாருக்காவது மாற்றுக் கருத்து இருந்தால் எதிர்ப்பு தெரிவிக்கலாமே தவிர தடை செய்ய நினைப்பது தவறானது. எனவே தயவு செய்து ருஷ்டி இந்தியா வருவதை தடுக்காதீர்கள் என்பதே எனது வேண்டுகோள் என்றார் ஷ்ரியா.
ருஷ்டி எழுதிய மிட்நைட் சில்ட்ரன் என்ற நாவல் தற்போது படமாகி வருகிறது. இதை தீபா மேத்தா இயக்குகிறார். இதில் ஷ்ரியாதான் நாயகியாக நடிக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.
தற்போது பாலிவுட்டில் பிசியாக இருக்கும் ஷ்ரியாவிடம், நீங்கள் சிவாஜி படத்தில் நடித்து தமிழில் பிரபலமானீர்கள்.அதேபோல சிவாஜியின் ராஜ்ஜியத்திலும் (பாலிவுட்) புகழ் பெறுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, இது மிகவும் வினோதமான ஒன்றுதான். ஆனால் ரஜினி ரூபத்தில் நான் மாவீரன் சிவாஜியைப் பார்த்தேன். ரஜினி ஒரு உண்மையான மராத்தி ஆவார். தமிழ்த் திரையுலகில் அவர் ஒரு சூப்பர் ஸ்டார். தேசிய அளவிலும் ஒரு முக்கியச் சின்னமாக விளங்குகிறார்.
சாதாரணமாக மனிதராக வாழ்க்கையை ஆரம்பித்து இன்று மிகப் பெரிய இடத்தில் இருக்கிறார். இதேபோலத்தான் மாவீரன் சிவாஜியின் வாழ்க்கையும் இருந்தது என்றார் ஷ்ரியா.
தற்போது கலி கலி சோர் ஹைய் என்ற படத்தில் நடித்துள்ளார் ஷ்ரியா. இப்படத்தில் வீணா மாலிக் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளாராம். நீங்களே அந்தக் குத்துப்பாட்டுக்கு ஆடியிருக்காலமே என்று கேட்டதற்கு, அதற்கு வாய்ப்பில்லை. காரணம், இப்படத்தில் நான் குடும்பப் பெண்ணாக வருகிறேன். அப்படி இருக்கையில், எப்படி குத்துப் பாட்டுக்கு ஆட முடியும் என்று கேட்டார் ஷ்ரியா.
இருந்தாலும் இந்தியில் ஒரு கலக்கலான குத்துப் பாட்டுக்கு ஆட துடிப்போடு காத்திருக்கிறாராம் ஷ்ரியா!