Don't Miss!
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- News சமாளிக்கவே முடியல.. மிகப் பெரிய பிரச்சினை! முதல்வருக்கு பறந்த கடிதம்.. அன்புமணி கொடுக்கும் ஐடியா!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
டேமேஜ் பண்ணாதீங்க! - குத்து ரம்யா
'குத்து', 'பொல்லாதவன்', 'வாரணம் ஆயிரம்' படங்களில் நடித்தவர் திவ்யா ஸ்பந்தனா. 'வடசென்னை' படத்தில் இப்போது நடிக்கிறார். கன்னடத்தில் முன்னணி நடிகையான இவர், காங்கிரஸ் கட்டியின் இளைஞர் பிரிவில் முக்கிய தலைவியாக உள்ளார்.
ஆனால் எப்போதும் காதல் கிசுகிசு, தயாரிப்பாளருடன் தகராறு என சர்ச்சைகளின் நாயகியாகத் திகழ்கிறார்.
பேட்டி கேட்டு வருபவர்களையும் துரத்திவிடுவது இவரது வழக்கமாம். சமீபத்தில் சென்னை வந்த அவரிடம் இதுபற்றி கேட்டனர்.
அதற்கு அவர் அளித்த பதில்:
நான் யாருடைய வற்புறுத்தலுக்கும் பணிய மாட்டேன். என் விருப்பப்படிதான் வாழ்கிறேன்.
சின்ன வயதிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டேன். சினிமா வாழ்க்கை நன்றாகவே இருக்கிறது. என்னைப் பற்றி பரவும் வதந்திகளை நான் கண்டு கொள்வதில்லை.
காதல், திருமணம் போன்றவை எல்லாம் என் தனிப்பட்ட விருப்பம். அதை பொதுவில் பேச முடியாது. என் விருப்பப்படி அந்த தனிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறேன்.
அரசியலில் நிறைய சாதிக்க வேண்டும், நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
என்னைப் பற்றி இந்த அளவு வெளியில் தெரிந்தாலே போதும். ஆனால் சிலர் தேவையில்லாமல் எனது சொந்த வாழ்க்கையை எழுதுகிறார்கள். கண்டதையும் எழுதி என்னை டேமேஜ் பண்ண வேண்டாம்," என்றார் திவ்யா.