Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
'போதை' மேனேஜர் கைது: அப்படியே 'ஷாக்' ஆன நடிகை காஜல் அகர்வால்
ஹைதராபாத்: போதைப் பொருள் வழக்கில் மேனேஜர் கைது செய்யப்பட்டுள்ளதை அறிந்து நடிகை காஜல் அகர்வால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
நடிகை காஜல் அகர்வாலின் மேனேஜர் ஜானி ஜோசப் என்கிற ரோன்னி போதைப் பொருள் வைத்திருந்த காரணத்தால் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார்.
அவர் வீட்டில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்த காஜல் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) July 25, 2017 |
அதிர்ச்சி
ரோன்னி சம்பவம் குறித்து அறிந்து நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன். சமூகத்திற்கு எதிரான எந்த நடவடிக்கைக்கும் நான் ஆதரவளிப்பது இல்லை.
என்னிடம் வேலை செய்பவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை என் கட்டுப்பாட்டில் இல்லை.
பெற்றோர்
என் கெரியரை என் பெற்றோர் கவனித்து வருகிறார்கள். என்னிடம் வேலை செய்பவர்கள் பணி நேரம் முடிந்த பிறகு என்ன செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார் காஜல்.
சார்மி
போதைப் பொருள் வழக்கில் விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டதை எதிர்த்து நடிகை சார்மி ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
உயர் நீதிமன்றம்
சார்மியின் மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கூறியிருப்பதாவது, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தான் சார்மியிடம் விசாரிக்க வேண்டும். பெண் போலீஸ் முன்னிலையில் தான் விசாரணை நடத்த வேண்டும். சார்மியின் அனுமதி இல்லாமல் ரத்த மாதிரி எடுக்கக் கூடாது. விசாரணையை வீடியோ எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.