Don't Miss!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சில்க் ஸ்மிதாவில் இருந்து முகமது அசாருத்தீனுக்கு தாவிய ஏக்தா கபூர்
மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருத்தீனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து படம் தயாரிக்கவிருக்கிறார் ஏக்தா கபூர்.
பாலிவுட் தயாரிப்பாளரான ஏக்தா கபூர் பிரபலங்களின் வாழ்க்கையை படமாக எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தி டர்ட்டி பிக்சர் என்ற படத்தை தயாரித்தார் ஏக்தா. இந்நிலையில் அவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீனின் வாழ்க்கையை படமாக்கும் ஆசை வந்துள்ளது.
இதையடுத்து அவர் படத்தை எடுக்க அசாருத்தீனிடம் அனுமதி வாங்கி பெரிய தொகையையும் அவருக்கு கொடுத்துள்ளாராம். மேலும் திரைக்கதை எழுதும் பணிகள் எல்லாம் முடிந்துவிட்டதாம்.
இது தவிர அசாராக நடிக்க வைக்க 3 ஹீரோக்களை ஷார்ட்லிஸ்ட் செய்து வைத்துள்ளாராம். அதில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டியது தான் பாக்கி. ஆனால் இத்தனை வேலைகளையும் முடித்துவிட்டாலும் இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியிடாமல் கமுக்கமாக உள்ளார் ஏக்தா. இந்த படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டே துவங்கவிருக்கிறதாம்.