Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சில்க் ஸ்மிதாவில் இருந்து முகமது அசாருத்தீனுக்கு தாவிய ஏக்தா கபூர்
மும்பை: முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருத்தீனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து படம் தயாரிக்கவிருக்கிறார் ஏக்தா கபூர்.
பாலிவுட் தயாரிப்பாளரான ஏக்தா கபூர் பிரபலங்களின் வாழ்க்கையை படமாக எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தி டர்ட்டி பிக்சர் என்ற படத்தை தயாரித்தார் ஏக்தா. இந்நிலையில் அவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீனின் வாழ்க்கையை படமாக்கும் ஆசை வந்துள்ளது.
இதையடுத்து அவர் படத்தை எடுக்க அசாருத்தீனிடம் அனுமதி வாங்கி பெரிய தொகையையும் அவருக்கு கொடுத்துள்ளாராம். மேலும் திரைக்கதை எழுதும் பணிகள் எல்லாம் முடிந்துவிட்டதாம்.
இது தவிர அசாராக நடிக்க வைக்க 3 ஹீரோக்களை ஷார்ட்லிஸ்ட் செய்து வைத்துள்ளாராம். அதில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டியது தான் பாக்கி. ஆனால் இத்தனை வேலைகளையும் முடித்துவிட்டாலும் இந்த படம் குறித்து அறிவிப்பு வெளியிடாமல் கமுக்கமாக உள்ளார் ஏக்தா. இந்த படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டே துவங்கவிருக்கிறதாம்.