Don't Miss!
- Automobiles காரை விட அவங்கதான் அழகா இருக்காங்க! விலை உயர்ந்த எலெக்ட்ரிக் வண்டியை வாங்கனது அவங்களா! சொக்கி போன ரசிகர்கள்!
- News நாங்க அப்பவே சொன்னோமே.. இவிஎம் பட்டனை தொட்டாலே பாஜகவுக்கு விழும் 2 ஓட்டு! காங்கிரஸ் புது டிமாண்ட்
- Finance Infosys: லாபத்தில் 30% உயர்வு, முதலீட்டாளர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் ரூ.28 ஈவுத்தொகை..!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Technology போட்டு தாக்கும் BSNL.. 300 ரூபாய்க்கு இப்படியொரு ரீசார்ஜ் திட்டமா? யாருக்கெல்லாம் இது பெஸ்ட் பிளான் தெரியமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காட்டு யானை மீது சவாரி செய்த நடிகைகள் நஸ்ரியா, ரஞ்சனி மீது புகார்
பிராணிகள் நலச் சங்க அனுமதி பெறாமல் காட்டு யானை மீது சவாரி செய்ததாக நடிகைகள் நஸ்ரியா, ரஞ்சனி ஆகியோர் மீது புகார் கிளம்பியுள்ளது.
பிரபல மலையாள நடிகைகள் நஸ்ரியா நசீம், ரஞ்சனி ஹரிதாஸ் இருவரும் கேரள வனத்துறைக்கு சொந்தமான யானை மீது சவாரி செய்துள்ளனர்.
இதனை எதிர்த்து விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்த செயலாளர் வெங்கடாசலம் என்பவர் திருச்சூரில் உள்ள பிராணிகள் நல வாரியத்திடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
அதில், "2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந்தேதி உயர்நீதி மன்ற உத்தரவுப்படி பிராணிகள் நலவாரியத்தின் அனுமதி இல்லாமல் யானைகள் மீது சவாரி செய்வது குற்றமாகும். பிராணிகள் நலவாரியத்திடம் எந்தவித அனுமதியும் பெறாமல் நடிகைகள் இருவரும் சில குழந்தைகளுடன் யானை மீது சவாரி செய்துள்ளனர்.
எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதற்கு துணை போன வனத்துறை அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை ரஞ்சனி, தெருநாய்கள் நலனுக்காக குரல் கொடுத்தவர். அவர் இப்படியொரு புகாருக்குள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.