நாய்களை அடிப்பவர்களை காட்டிக் கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு: நடிகை அறிவிப்பு
மும்பை: நாய்களை அடிப்பவர்களை அடையாளம் காட்டுபவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று பாலிவுட் நடிகை இஷா குப்தா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை இஷா குப்தா ஒரு விலங்கு பிரியர். அவர் வீ்ட்டில் 2 தெரு நாய்கள் உள்பட 4 நாய்கள் உள்ளன. அதில் ஒரு நாய் அண்மையில் தான் இறந்து போனது. இந்நிலையில் அவரது மேக்கப் மேன் யாரோ ஒருவர் நாயை அடித்து துன்புறுத்தும் வீடியோவை அவரிடம் காண்பித்துள்ளார்.

அதை பார்த்து கோபம் அடைந்த இஷா நாயை அடித்த அந்த நபரின் மர்ம உறுப்பை அறுக்க வேண்டும் என்று கொந்தளித்தார். இந்நிலையில் அவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, யாராவது நாயை அடித்து துன்புறுத்துவதை பார்த்தால் அதை வீடியோ எடுத்து அந்த நபரை அடையாளம் காட்டுபவர்களுக்கு தான் ரூ.1 லட்சம் பரிசு அளிப்பதாக அறிவித்துள்ளார்.
இஷாவின் இந்த அதிரடி அறிவிப்பு சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











