Don't Miss!
- News 320 ஆக உயர்ந்த சர்க்கரை அளவு.. திகார் சிறையில் கெஜ்ரிவாலுக்கு முதல் முறையாக இன்சுலின் ஊசி
- Lifestyle சித்ரா பெளர்ணமி.. திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்.. கிரிவலம் செல்ல நல்ல நேரம் எது?
- Technology இது தெரியாம போச்சே.. இன்டர்நெட் இல்லாமல் UPI கட்டணம் செலுத்தலாமா? Google Pay, PhonePe, Paytm மக்களே கவனியுங்க!
- Finance தங்கம் விலை இன்று 1450 ரூபாய் சரிவு.. இதுதான் திரில்லிங்கான நேரம்.. தங்கத்தை இப்போ வாங்கலாமா..?
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே வேறு எந்த வீரரும் செய்யாத செஞ்சுரி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
- Automobiles இந்த கிளட்ச் இல்லாத கியர் பைக் ஏன் இப்பொழுது விற்பனையில் இல்லை தெரியுமா? இதுக்கு பின்னாடி இவ்வளவு நடந்துச்சா?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
“நா என்ன தப்பு பண்ணினேன்.. அதை நினைத்து தினமும் இரவு கதறினேன்”.. படவிழாவில் மேடையிலேயே அழுத நடிகை!
அவனே ஸ்ரீமன்நாராயணா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் மேடையிலேயே கதறி அழுதார் நடிகை ஷான்வி ஸ்ரீவத்சவா.
ஐதராபாத்: நடிகை ஷான்வி ஸ்ரீவத்சவா விழா மேடையில் உடைந்து அழுதது அனைவரையும் உருக வைத்தது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள படம் அவனே ஸ்ரீமன்நாராயணா. தமிழில் இப்படம் ஜனவரி 3ம் தேதி வெளியாகிறது.
புதுமுக இயக்குனர் சச்சின் இயக்கியுள்ள இந்த படத்தில் மூன்று ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ரக்ஷித் ஷெட்டி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக லவ்லி, அட்டா, ரவுடி ஆகிய படங்களில் தெலுங்கு படங்களில் நடித்த ஷான்வி ஸ்ரீவத்சவா நடித்துள்ளார்.
மோசமான ஆடையில் ஆண் நண்பருடன் ஒட்டி உரசி செம செக்ஸி ஆட்டம் போட்ட மீரா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
அவனே ஸ்ரீமன்நாராயணா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. விழாவில் பேசிய நடிகை ஷான்வி, "நான் பார்ப்பதற்கு அழகாக இல்லாமல் இருக்கலாம். நான் சரியாக நடிக்காமல் இருக்கலாம். அதற்காக எனக்கு ஆதரவு அளிக்காமல் இருக்காதீர்கள். ஊடக நண்பர்கள் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
ராம் கோபால் வர்மாவின் ரவுடி படத்தில் நடித்தப்பிறகு தெலுங்கில் எனக்கு படங்களே அமையவில்லை. சுமார் ஒன்றரை ஆண்டுகள் நான் வேலையே இல்லாமல் தவித்தேன். அதை நினைத்து தினமும் இரவு கதறி அழுவேன்.
நான் என்ன தவறு செய்தேன் என எனக்கு தெரியவில்லை. என்னை நான் நிரூப்பிக்க அவனே ஸ்ரீமன்நாராயணா படம் மூலம் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது", எனக் கூறியவர் மேடையிலேயே உடைந்து அழுதார். அதைப்பார்த்த அனைவரும் உருகினர். பின்னர் பலத்த கரகோஷங்கள் எழுப்பி ஷான்வியை ஆற்றுப்படுத்தினர்.