Don't Miss!
- Sports ராசியே கிடையாது.. ருதுராஜ் சதமடித்தால் சிஎஸ்கே தோல்வி உறுதி.. இப்படி நடப்பது 2வது முறையாம்!
- News உங்க ஐகியூவை டெஸ்ட் பண்ணிடலாம்.. எந்த டேங்கர் லாரி போய்க்கொண்டு இருக்கிறது.. முடிந்தால் கண்டுபிடிங்க
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சினிமாவை விட சமையல்தான் பிடித்திருக்கிறது… நடிகை ஆதிராவின் புதிய பயணம்
திருவனந்தபுரம்: சினிமாவில் கதாநாயகியாக நடித்தவர்கள் வாய்ப்பிற்குப் பின்னர் சீரியலுக்கு சென்று விடுவார்கள். ஆனால் ஒரு கதாநாயகி இப்போது சமையல் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்.
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் ஹீரோயினாக நடித்த நாயகி ஆதிராதான் இன்று சமையல் கலை வல்லுநராக மாறி 500 முதல் 1000 பேருக்கு வரை உணவு சமையல் செய்து தருகிறார்.
தாதாசாகிப் என்ற மலையாள திரைப்படத்தில் மம்மூட்டியின் கதாநாயகி. தொடர்ந்து ஐந்து படங்களில் பிரபல நடிகர்களோடு கதாநாயகியாக நடித்தார். பின்னர் நடிப்புக்கு டாட்டா காட்டிவிட்டு கணவருடன் இணைந்து சமையல் வேலை செய்யத் தொடங்கியுள்ளார்.
ஆதிராவின் கணவர் விஷ்ணு நம்பூதிரி கோட்டயத்தை சேர்ந்தவர். சமையல் கலைஞர். அவர் காயத்ரி கேட்டரிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
2004-ம் ஆண்டு இவர்கள் திருமணம் நடக்கும்போது ரம்யாவுக்கு டீ மற்றும் நூடுல்ஸ் இரண்டும்தான் தயாரிக்க தெரியும். அடுத்த 3 ஆண்டுகளில் கணவரிடம் இருந்து சமையல் வித்தைகளை கற்றுக்கொண்டு, சமையல் அறைக்குள் புகுந்துவிட்டார்.
500 பேருக்கு சமையல்
இப்போது கணவருடன் இணைந்து 60 கிலோ அரிசியை வேகவைத்து, 80 கிலோ காய்கறிகளை நறுக்கி 150 தேங்காய்களை உடைத்து துருவி அசராமல் சமைப்பாராம்.
சமையல்தான் சூப்பர்
சினிமாவை விட சமையல்தான் பிடித்திருக்கிறது என்று கூறும் ஆதிரா.சினிமா ஒரு எலிப்பொறி போன்றது. அதன் மீது ஆசை வைத்துவிட்டால் அதன் உள்ளே நாம் சிக்கிக்கொள்வோம். திருமணத்தின் மூலம் நான் அந்த பொறியில் இருந்து தப்பினேன் என்கிறார்.
சந்தோச வாழ்க்கை
நாம் கஷ்டப்பட்டு உழைத்து வாழ்ந்தால் அதன் மூலம் நமக்கு நிறைய மகிழ்ச்சி கிடைக்கும். நான் நல்ல முறையில் சம்பாதித்து வாழ்கிறேன் என்பதை பலரும் அறிந்துகொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதை அடைந்துவிட்டேன். நான் சினிமாவில் கண்ணீரை மட்டும்தான் குடித்தேன். அந்த கஷ்ட வாழ்க்கை முடிந்துபோய்விட்டது என்கிறார்.
ரம்யா- விஷ்ணு நம்பூதிரி தம்பதிகளுக்கு வைஷ்ணவி, வரதா என்று இரண்டு மகள்கள். அவர்கள் இருவருக்கும் அம்மா கதாநாயகியாக நடித்த படங்களைவிடவும், அம்மாவின் சமையல்தான் ரொம்ப பிடித்திருக்கிறதாம்.
அமைதியான வாழ்க்கை
சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைக்கு நல்ல முறையில் குடும்ப வாழ்க்கை அமையும் என்று சொல்ல முடியாது. நான் மனஅமைதி நிறைந்த குடும்ப வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்றும் கூறுகிறார்