Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நித்யானந்தா மீது எனக்கு கிரஷ்..திருமணம் செய்ய ஆசை..நடிகை பிரியா ஆனந்தின் விபரீத பேட்டி!
சென்னை : நித்யானந்தா மீது தனக்கு கிரஷ் இருப்பதாகவும் பிரபல நடிகை பிரியா ஆனந்த் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
பாலியல் பலாத்காரம், கடத்தல், மோசடி என பல குற்றச்சாட்டுகளின் பேரில் போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா இந்தியாவில் இருந்து தப்பி தலைமறைவாகி கைலாசா என்ற நாட்டை உருவாக்கி அதில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
கைலாசாவில் இருந்து தினமும் வீடியோக்கள் வந்தாலும், கைலாசா எங்கே இருக்கிறது, எப்படி இருக்கிறது என்ற எந்த தகவலும் யாருக்கும் தெரியாது. பனிகள், மலைகள், கடல் என நித்யானந்தா சொல்வதைத்தான் நாமும் வாய்பிளந்து கேட்டுவருகிறோம்.
சமந்தாவின் பக்காவான பாலிவுட் அறிமுகம்.. அதுவும் இந்த பிரபல நடிகர் படத்திலா? தீயாய் பரவும் தகவல்!
நித்யானந்தா மீது க்ரஷ்
இந்நிலையில், பிரபல நடிகை பிரியா ஆனந்த் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், நித்யானந்தா மீது தனக்கு க்ரஷ் இருப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொண்டால் பிரியா ஆனந்த் என்கிற பெயரைக்கூட மாற்ற தேவை இல்லை என்றும், பெயர் பொருத்தம் பக்காவாக இருப்பதாக கூறியுள்ளார். அவரை எல்லாருக்கும் பிடிக்கிறது அவரை அனைவரும் பின் தொடர்கிறார்கள் என்றால் அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது அதனால் தான் அனைவரும் அவரின் பேச்சை கேட்டு வருவதாக கூறியுள்ளார்.
பிரியா ஆனந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான பிரியா ஆனந்த், நடிகர் ஜெய்க்கு ஜோடியாக வாமனன் படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகினார். தனது முதல் படத்திலேயே நல்ல வரவேற்பினை பெற்று பலராலும் அறியப்பட்ட கதாநாயகியானார். தமிழை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என பல மொழிகளிலும் படங்கள் நடித்து அசத்தினார்.
வியப்பில் ரசிகர்கள்
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த எதிர்நீச்சல் திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இதையடுத்து, வணக்கம் சென்னை, வை ராஜா வை, அபிமா நம்பி, இரும்பு குதிரை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகையாக இருக்கும் இவரே நித்யானந்த மீது க்ரஷ் இருப்பதாக கூறியுள்ளது பலரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
உடல்மெலிந்த நித்யானந்தா
மேலும், சாமியார் நித்யானந்தாவின் இணையதள பக்கத்திலிருந்து கடந்த சில நாட்களாக வீடியோக்கள் வெளியாகததால், அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் பரவின. இதையடுத்து, நித்யானந்தா தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். ஆனால், அந்த போட்டோவில் வழக்கமான அவரது தேஜஸ் குறைந்து, உடல்மெலிந்து காணப்படுகிறார். இதனால், அவருக்கு என்ன ஆயிற்று என்று அவரது ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.