twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னை தங்கச்சியாக நினைத்ததால் கவர்ச்சிக்கு மாறினேன் - நீத்து

    By Staff
    |

    Neetu Chandra
    மும்பை: திரைத் துறையினர் அனைவரும் என்னை சகோதரியாகவே நினைத்து வந்தனர். இதனால் தான் நான் கவர்ச்சிக்கு மாறி அந்த இமேஜை மாற்றியுள்ளேன் என்கிறார் பாலிவுட் நடிகை நீத்து சந்திரா.

    அக்ஷய் குமார் நடித்த கரம் மசாலா படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் நீத்து சந்திரா. தமிழில் யாவரும் நலம் படத்தில் நடித்துள்ளார். விஷாலுடன் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்திலும் நடித்துள்ளார்.

    படு கவர்ச்சிகரமாக மாடல் கிரிஷ்தா குப்தாவுடன் ஒரு ஆடவர் இதழுக்காக அவர் கொடுத்த ஏடாகூடமான போஸ் சர்ச்சைகளைக் கிளப்பியது.

    அவரது கவர்ச்சிப் புயல் பாலிவுட்டில் பலமாகவே வீசி வருகிறது - கூடவே சர்ச்சைகளும். ஆனால் தனது கவர்ச்சிப் பாதைக்கு வினோதமான காரணம் சொல்கிறார் நீத்து.

    இதுகுறித்து அவர் கூறுகையில், பாலிவுட்டில் எல்லோருமே என்னை ஒரு சகோதரி போலவே பார்த்து வந்தனர். இது எனக்கு சங்கடமாக இருந்தது.

    இந்த இமேஜை மாற்ற வேண்டும் என்பதற்காகவே கவர்ச்சிப் பாதைக்குத் திரும்பினேன். கிறிஸ்தாவுடனான போட்டோ ஷூட்டிங்குக்கு முன்பு வரை என்னை யாருமே கவனிக்கவில்லை. ஆனால் அதற்குப் பிறகுதான் எல்லோரும் என்னைப் பார்க்க ஆரம்பித்தனர்.

    எப்போதுமே எனது மனதுக்குப் பிடித்ததை மட்டுமே நான் செய்வேன். ஒரு முடிவு எடுத்து விட்டால் அதில் உறுதியோடு இருப்பேன்.

    கடந்த காலத்தில் நான் எப்படி இருந்தேன் என்பதற்காக வருத்தப்பட்டதே கிடையாது. உங்களுக்கு அழகான உடல் இருந்தால் அதை நீங்கள் அழகாக காட்டித்தான் ஆக வேண்டும் என்றார் நீத்து.

    தனது முதல் படத்திலேயே கவர்ச்சிகரமான நீச்சல் உடையில் வந்து கதி கலக்கியவர் நீத்து என்பது நினைவிருக்கலாம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X