Don't Miss!
- News ஓட்டு போட சொந்த ஊர் போனவங்களுக்கு வந்த குட்நியூஸ்.. சென்னைக்கு இன்று முன்பதிவில்லா ஸ்பெஷல் ரயில்
- Finance சென்னை லயோலா-வில் படித்த அஜித்.. பெங்களூரிலேயே காஸ்ட்லியான இடத்தை வாங்கியிருக்கிறார்.. யார் இவர்..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
என்னை தங்கச்சியாக நினைத்ததால் கவர்ச்சிக்கு மாறினேன் - நீத்து
அக்ஷய் குமார் நடித்த கரம் மசாலா படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் நீத்து சந்திரா. தமிழில் யாவரும் நலம் படத்தில் நடித்துள்ளார். விஷாலுடன் தீராத விளையாட்டுப் பிள்ளை படத்திலும் நடித்துள்ளார்.
படு கவர்ச்சிகரமாக மாடல் கிரிஷ்தா குப்தாவுடன் ஒரு ஆடவர் இதழுக்காக அவர் கொடுத்த ஏடாகூடமான போஸ் சர்ச்சைகளைக் கிளப்பியது.
அவரது கவர்ச்சிப் புயல் பாலிவுட்டில் பலமாகவே வீசி வருகிறது - கூடவே சர்ச்சைகளும். ஆனால் தனது கவர்ச்சிப் பாதைக்கு வினோதமான காரணம் சொல்கிறார் நீத்து.
இதுகுறித்து அவர் கூறுகையில், பாலிவுட்டில் எல்லோருமே என்னை ஒரு சகோதரி போலவே பார்த்து வந்தனர். இது எனக்கு சங்கடமாக இருந்தது.
இந்த இமேஜை மாற்ற வேண்டும் என்பதற்காகவே கவர்ச்சிப் பாதைக்குத் திரும்பினேன். கிறிஸ்தாவுடனான போட்டோ ஷூட்டிங்குக்கு முன்பு வரை என்னை யாருமே கவனிக்கவில்லை. ஆனால் அதற்குப் பிறகுதான் எல்லோரும் என்னைப் பார்க்க ஆரம்பித்தனர்.
எப்போதுமே எனது மனதுக்குப் பிடித்ததை மட்டுமே நான் செய்வேன். ஒரு முடிவு எடுத்து விட்டால் அதில் உறுதியோடு இருப்பேன்.
கடந்த காலத்தில் நான் எப்படி இருந்தேன் என்பதற்காக வருத்தப்பட்டதே கிடையாது. உங்களுக்கு அழகான உடல் இருந்தால் அதை நீங்கள் அழகாக காட்டித்தான் ஆக வேண்டும் என்றார் நீத்து.
தனது முதல் படத்திலேயே கவர்ச்சிகரமான நீச்சல் உடையில் வந்து கதி கலக்கியவர் நீத்து என்பது நினைவிருக்கலாம்.