twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒருவேளை 'அதுக்குத்தான்' வந்திருப்பாரோ.. - சந்தேகத்தில் சன்னி லியோன் மீது சூரத் போலீஸ் வழக்கு

    By Siva
    |

    பட விளம்பரத்துக்காக வந்த சன்னி லியோன் மீது சூரத் போலீஸ் எப்ஐஆர்!

    சூரத்: ஏக் பெஹலி லீலா படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக வந்த நடிகை சன்னி லியோன் மீது சூரத் போலீசார் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்துள்ளனர்.

    FIR lodged against Sunny Leone

    விரைவில் ரிலீசாகவிருக்கும் இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சி சூரத் நகரில் சமீபத்தில் நடந்தது.

    இதில் சன்னி லியோன், அவர் கணவர் டேனியல் வெபர், இயக்குநர் பாபி கான், உடன் நடித்த ஜெய் பனுஷாலி ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்த விளம்பர நிகழ்ச்சி முதலில் ஒரு பைவ் ஸ்டார் ஓட்டலில் நடந்தது. ஆனால் பிறகு வேறு இடத்துக்கு மாற்றிவிட்டார் தயாரிப்பாளர்.

    இதனால் போலீசார் சன்னி லியோன் மீது சந்தேகப்பட்டு வழக்குப் பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    சரி, அப்படி என்ன சந்தேகம் போலீசுக்கு?

    கடந்த ஆண்டு புனே - மும்பை நெடுஞ்சாலை விடுதியொன்றில் வைர வியாபாரிகள் நடத்திய விருந்தில் பங்கேற்ற சன்னி லியோன் மேலாடையின்றி போஸ் கொடுத்திருந்தார்.

    இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால் அது அங்கே எடுக்கப்பட்டதல்ல. பழைய போட்டோ என்றெல்லாம் சன்னி லியோன் விளக்கம் அளித்தார்.

    இப்போது சன்னி லியோன் சூரத்துக்கு வந்ததும், பட நிகழ்ச்சியை புறநகர்ப் பகுதிக்கு மாற்றியதிலும் வேறு ஏதேனும் நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்களாம் சூரத் போலீசார்.

    யூகத்தின் அடிப்படையில் கூடவா வழக்கு பதிவார்கள்?

    English summary
    On Sunday, Sunny Leone was in Surat for the promotions of her upcoming film ‘Ek Paheli Leela’ and what was unfortunate was in the midst of confusion, a FIR being lodged against her.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X