Don't Miss!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஒருவேளை 'அதுக்குத்தான்' வந்திருப்பாரோ.. - சந்தேகத்தில் சன்னி லியோன் மீது சூரத் போலீஸ் வழக்கு
பட விளம்பரத்துக்காக வந்த சன்னி லியோன் மீது சூரத் போலீஸ் எப்ஐஆர்!
சூரத்: ஏக் பெஹலி லீலா படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக வந்த நடிகை சன்னி லியோன் மீது சூரத் போலீசார் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்துள்ளனர்.
விரைவில் ரிலீசாகவிருக்கும் இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சி சூரத் நகரில் சமீபத்தில் நடந்தது.
இதில் சன்னி லியோன், அவர் கணவர் டேனியல் வெபர், இயக்குநர் பாபி கான், உடன் நடித்த ஜெய் பனுஷாலி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த விளம்பர நிகழ்ச்சி முதலில் ஒரு பைவ் ஸ்டார் ஓட்டலில் நடந்தது. ஆனால் பிறகு வேறு இடத்துக்கு மாற்றிவிட்டார் தயாரிப்பாளர்.
இதனால் போலீசார் சன்னி லியோன் மீது சந்தேகப்பட்டு வழக்குப் பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சரி, அப்படி என்ன சந்தேகம் போலீசுக்கு?
கடந்த ஆண்டு புனே - மும்பை நெடுஞ்சாலை விடுதியொன்றில் வைர வியாபாரிகள் நடத்திய விருந்தில் பங்கேற்ற சன்னி லியோன் மேலாடையின்றி போஸ் கொடுத்திருந்தார்.
இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால் அது அங்கே எடுக்கப்பட்டதல்ல. பழைய போட்டோ என்றெல்லாம் சன்னி லியோன் விளக்கம் அளித்தார்.
இப்போது சன்னி லியோன் சூரத்துக்கு வந்ததும், பட நிகழ்ச்சியை புறநகர்ப் பகுதிக்கு மாற்றியதிலும் வேறு ஏதேனும் நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்களாம் சூரத் போலீசார்.
யூகத்தின் அடிப்படையில் கூடவா வழக்கு பதிவார்கள்?