Just In
- 47 min ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 1 hr ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 2 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 3 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- News
குட்கா வழக்கு -முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
- Automobiles
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
திருமணத்தில் ஆடுவதாகக் கூறி ரூ. 11 லட்சம் மோசடி.. விஜய் பட நாயகி மீது வழக்கு!

சென்னை: திருமணத்தில் ஆடுவதாகக் கூறி பண மோசடி செய்ததாக, நடிகை அமீஷா பட்டேல் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
விஜய், மீரா ஜாஸ்மின் நடித்திருந்த புதிய கீதை படத்தில் மற்றொரு நாயகியாக நடித்திருந்தவர் அமீஷா பட்டேல். தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையாததால், மேடை நிகழ்ச்சிகளில் நடனம் ஆட ஒப்புக்கொண்டு வந்தார். அதற்காக அவருக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டது.

சினிமா வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், சமூக வலைதளங்களில் தன்னை பரபரப்புடன் வைத்துக்கொண்டிருக்கிறார் அமீஷா பட்டேல். தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டும் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்கள் தெரிவித்தும் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
பணத்திற்காக அரசியல் கட்சிகளுக்கு விளம்பரம் செய்ய ஒப்புக் கொண்ட நடிகர்கள், பாடகர்கள்
இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு, திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆட ஒப்புக்கொண்டு ரூ. 11 லட்சம் சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஒப்புக்கொண்டபடி திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆட வரவில்லை எனக் கூறி அவரை ஒப்பந்தம் செய்த நிறுவனம், அமீஷா பட்டேல் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. அவருடன் மேலும் 4 பேரும் இந்த வழக்கில் இணைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக பவன் சர்மா என்பவர் அளித்துள்ள புகாரில், கடந்த 2016ம் ஆண்டு ஒரு திருமண நிகழ்ச்சியில் நடனமாடுவதற்காக அமீஷாவை ரூ.11 லட்சம் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்ததாகவும், ஆனால் அவர் நிகழ்ச்சி தொடங்கும் சமயத்தில் கூடுதலாக இரண்டு லட்சம் ரூபாய் கேட்டதாகவும் கூறியுள்ளார். தாங்கள் கூடுதல் பணம் தர மறுத்ததைத் தொடர்ந்து, தங்களிடம் தகவல் தெரிவிக்காமலேயே அமீஷா புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் அவர்க்ள் கூறியிருந்தனர்.
பணத்தை திருப்பி தர அமீஷா மறுத்து வருவதாகவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் சர்மா தனது புகாரில் கூறியுள்ளார். பவன் சர்மா புகாரின் பேரில் அமீஷா மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ள மும்பை போலீசார், அமீஷா உள்ளிட்ட 5 பேரை மார்ச் 12 தேதி மும்பை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.