Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சோலார் பேனல் மோசடி: நடிகை ஷாலு மேனன் மீது புது வழக்கு
கேரளாவில் நடந்த சோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை சாலுமேனன் கைது செய்யப்பட்டார். அவரை 20ம் தேதி வரை சிறையில் அடைக்க திருவனந்தபுரம் மாவட்ட முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் அங்குள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பிஜு ராதாகிருஷ்ணன் திருச்சூரில் இருந்து கோவைக்கு தப்பி செல்ல சாலுமேனன் உதவியதாக பெரும்பாவூரை சேர்ந்த சஜாத் என்பவர் போலீசில் புகார் தெரிவித்திருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் சாலுமேனனின் காரில் பிஜு ராதாகிருஷ்ணன் தப்பி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து பிஜு ராதாகிருஷ்ணன் தப்பி செல்ல உதவியதாக சாலுமேனன் மீது பெரும்பாவூர் போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே ஜாமீன் கோரி சாலுமேனன் கேரள உயர்நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இருமுறை தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.