Don't Miss!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சோலார் பேனல் மோசடி: நடிகை ஷாலு மேனன் மீது புது வழக்கு
கேரளாவில் நடந்த சோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை சாலுமேனன் கைது செய்யப்பட்டார். அவரை 20ம் தேதி வரை சிறையில் அடைக்க திருவனந்தபுரம் மாவட்ட முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் அங்குள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பிஜு ராதாகிருஷ்ணன் திருச்சூரில் இருந்து கோவைக்கு தப்பி செல்ல சாலுமேனன் உதவியதாக பெரும்பாவூரை சேர்ந்த சஜாத் என்பவர் போலீசில் புகார் தெரிவித்திருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் சாலுமேனனின் காரில் பிஜு ராதாகிருஷ்ணன் தப்பி சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து பிஜு ராதாகிருஷ்ணன் தப்பி செல்ல உதவியதாக சாலுமேனன் மீது பெரும்பாவூர் போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே ஜாமீன் கோரி சாலுமேனன் கேரள உயர்நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு இருமுறை தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.