கஜாலா அழுதால்... தற்கொலை முயற்சி புகழ் கஜாலா அவ்வப்போது தமிழுக்கு வந்து போவார். தெலுங்கிலும் இப்போது அந்த நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். அவரது கையில் இப்போது விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்குத்தான் படம் உள்ளதாம். இந் நிலையில் கஜாலாவால் இயக்குனர்களுக்கு நூதனப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாம். தற்கொலை முயற்சிக்குப் பிறகு அவரிடம் எப்படி நடந்து கொள்வது என்றே தெரியாமல் இயக்குனர்கள் புலம்பித் தவிக்கிறார்களாம். அந்த அளவுக்கு அவர் நடந்து கொள்ளும் விதம் இருக்கிறதாம். ஒரு காட்சியை மீண்டும் மீண்டும் ரீடேக் வாங்கினால் அந்த நடிகர் அல்லது நடிகை மீது இயக்குனருக்கு எரிச்சல் ஏற்படுவது சகஜம். பாரதிராஜா, சரியாக நடிக்காவிட்டால் யாராக இருந்தாலும் ஒரு பளார் விட்டு விடுவார். அதேபோலத்தான் பாலச்சந்தரும், கையில் கிடைப்பதை தூக்கி வீசி தனது கோபத்தை வெளிப்படுத்துவார். ஆனால் கஜாலா விஷயத்தில் இதையெல்லாம் செய்ய முடியாத வகையில், இயக்குநிர்கள் தவிக்கிறார்களாம். காரணம் கோபமாக எதையாவது சொன்னால் உட்கார்ந்து அழத் தொடங்கி விடுகிறாராம். அழுகைன்னா சும்மா இல்லை, ரொம்ப நேரம் தேம்பித் தேம்பி அழுது யூனிட்டையே கலங்கடித்து விடுகிறாராம். எங்கே நாம் ரொம்பத் திட்டப் போக அதை சாக்காக வைத்து மறுபடியும் தூக்க மாத்திரையைப் போட்டு விட்டால் என்னாவது என்ற பயத்தில் இயக்குனர்களும் கஜாலாவை ரொம்ப வற்புறுத்துவதில்லையாம். முடிஞ்சவரை நல்லா நடிம்மா என்று கெஞ்சிக் கெதறி நடிக்க வைக்கிறார்களாம். என்னைத் தயவு செய்து யாரும் திட்டாதீங்க, எனக்கு மென்மையான மனசு, நல்லா நடிக்காட்டா மெதுவா எடுத்துக் கூறி திருப்பி நடிக்க வையுங்க, ஆனால் தயவு செய்து திட்ட மட்டும் செய்யாதீங்க என்று நா தழு தழுக்க தன்னை திட்டும் இயக்குனர்களிடம் சொல்லிவிட்டு அழுகிறாராம் கஜாலா. அடடே, திட்டு வாங்குவதிலிருந்து தப்பிக்க இப்படி கூட வழி இருக்கா!

By Staff

தற்கொலை முயற்சி புகழ் கஜாலா அவ்வப்போது தமிழுக்கு வந்து போவார். தெலுங்கிலும் இப்போது அந்த நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். அவரது கையில் இப்போது விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்குத்தான் படம் உள்ளதாம்.

இந் நிலையில் கஜாலாவால் இயக்குனர்களுக்கு நூதனப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாம். தற்கொலை முயற்சிக்குப் பிறகு அவரிடம் எப்படி நடந்து கொள்வது என்றே தெரியாமல் இயக்குனர்கள் புலம்பித் தவிக்கிறார்களாம்.

அந்த அளவுக்கு அவர் நடந்து கொள்ளும் விதம் இருக்கிறதாம்.


ஒரு காட்சியை மீண்டும் மீண்டும் ரீடேக் வாங்கினால் அந்த நடிகர் அல்லது நடிகை மீது இயக்குனருக்கு எரிச்சல் ஏற்படுவது சகஜம். பாரதிராஜா, சரியாக நடிக்காவிட்டால் யாராக இருந்தாலும் ஒரு பளார் விட்டு விடுவார்.

அதேபோலத்தான் பாலச்சந்தரும், கையில் கிடைப்பதை தூக்கி வீசி தனது கோபத்தை வெளிப்படுத்துவார்.

ஆனால் கஜாலா விஷயத்தில் இதையெல்லாம் செய்ய முடியாத வகையில், இயக்குநிர்கள் தவிக்கிறார்களாம். காரணம் கோபமாக எதையாவது சொன்னால் உட்கார்ந்து அழத் தொடங்கி விடுகிறாராம்.


அழுகைன்னா சும்மா இல்லை, ரொம்ப நேரம் தேம்பித் தேம்பி அழுது யூனிட்டையே கலங்கடித்து விடுகிறாராம்.

எங்கே நாம் ரொம்பத் திட்டப் போக அதை சாக்காக வைத்து மறுபடியும் தூக்க மாத்திரையைப் போட்டு விட்டால் என்னாவது என்ற பயத்தில் இயக்குனர்களும் கஜாலாவை ரொம்ப வற்புறுத்துவதில்லையாம். முடிஞ்சவரை நல்லா நடிம்மா என்று கெஞ்சிக் கெதறி நடிக்க வைக்கிறார்களாம்.

என்னைத் தயவு செய்து யாரும் திட்டாதீங்க, எனக்கு மென்மையான மனசு, நல்லா நடிக்காட்டா மெதுவா எடுத்துக் கூறி திருப்பி நடிக்க வையுங்க, ஆனால் தயவு செய்து திட்ட மட்டும் செய்யாதீங்க என்று நா தழு தழுக்க தன்னை திட்டும் இயக்குனர்களிடம் சொல்லிவிட்டு அழுகிறாராம் கஜாலா.

அடடே, திட்டு வாங்குவதிலிருந்து தப்பிக்க இப்படி கூட வழி இருக்கா!

Read more about: when gajala cries
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X