twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கெளதமுக்கும் எனக்கும் 'செம கெமிஸ்ட்ரி'... சொல்கிறார் 'கடல்' துளசி

    By Mayura Akilan
    |

    கடல் படத்தில் எனக்கும் கவுதமுக்கும் இடையை கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. மணிரத்னம் தான் எங்களுக்கு நடிப்பு கற்றுக்கொடுக்கும் குரு. எங்களை ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று கடல் நாயகி துளசி கூறியுள்ளார்.

    துளசி மணிரத்னத்தின் 'கடல்' படத்தில் அறிமுகமாகியுள்ளார். அம்மா ராதா, பெரியம்மா அம்பிகா, அக்கா கார்த்திகா ஆகியோரைப் போல பிரபலமாக வருவாரா என ஆகியோரைப் போல இவரும் பிரபலமாவாரா என்று எல்லோரும் பரபரப்பாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இதனிடையே தனது கடல் படத்தின் அனுபவங்களை ரசிகர்களிடையே பகிர்ந்து கொண்டுள்ளார் துளசி நாயர் கூறியுள்ளார்.

    குடும்பத்தில் அம்மா, அக்கா, பெரியம்மா என எல்லோரும் சினிமாவில் இருந்தாலும் துளசி சினிமாவில் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லையாம் பள்ளியில் ஒரு நாடகத்தில் நடித்திராத தனக்கு மணிரத்னம்தான் குருவாக இருந்து நடிப்பு கற்றுக்கொடுக்கிறாராம்.

    தன்னுடன் ஜோடியாக நடிக்கும் கவுதம் அமைதியான அழகான நடிப்பை வெளிப்படுத்துகிறார் என்கிறார் துளசி. அவர்கள் இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டதாம்.

    சினிமாவில் பல விசயங்கள் புரியாவிட்டாலும் மணி ரத்னம் உதவி செய்வதால் எந்தக் கவலையும் இல்லாமல் நடித்து வருகிறோம் என்கிறார் துளசி.

    அக்கா கார்த்திகாவிடம் படப்பிடிப்பு தளத்தில் நடந்ததை தவறாமல் பகிர்ந்து கொள்வாராம் துளசி. எனது நடிப்பையும், கதாபாத்திரத்தையும் மக்கள் விரும்புவார்கள். யாரோடும் என்னை ஒப்பிட வேண்டாம் புதிதாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்றும் ரசிகர்களுக்கு அன்பு கோரிக்கை வைத்துள்ளார் துளசி.

    English summary
    Actress Tulasi has said that, Gautham is an amazing person a complete sweetheart and very down to earth person. Tulasi debuts in Kadal movie it is noted
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X