முடிந்தது ஜெனிலியா - ரிதேஷ் நிச்சயதார்த்தம்... மத்திய அமைச்சர் வீட்டில் நடந்தது!

இதுவரை தங்களுக்கிடையிலான காதல் மற்றும் திருமணம் குறித்து வெளியான அனைத்து செய்திகள் மற்றும் வதந்திகளையும் தொடர்ந்து மறுத்து வந்தனர் ஜெனிலியாவும் ரிதேஷும்.
கடந்த வாரம் கேட்டபோதுகூட, இப்போதைக்கு திருமண திட்டமே இல்லை என்று ஜெனிலியா கூறினார்.
ஆனால் இன்று பத்திரிகைச் செய்திகளே உண்மையாகியுள்ளன.
மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் வீட்டில்தான் இந்த நிச்சதார்த்தம் நடந்துள்ளது.
ஆரம்பத்தில் மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக், இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தார். ஒரு நடிகையை மருமகளாக ஏற்க முடியாது என்று வெளிப்படையாகக் கூறியிருந்தார்.
ஆனால் ஜெனிலியா - ரிதேஷ் காதலின் உறுதியைப் பார்த்து இப்போது சமாதானமாகிவிட்டாராம். தானே முன்னின்று தனது அரண்மனை போன்ற வீட்டில் இந்த நிச்சயதார்த்தத்தை நண்பர்கள், உறவினர்கள் சூழ நடத்தியுள்ளார்.
திருமணத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











