Don't Miss!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிக்கும் ஆசை வந்துடுச்சி... மீண்டும் மேக்கப்ப போடும் ஜெனிலியா!
திருமணத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்கும் ஆசை வந்துவிட்டதால் அடுத்த ரவுண்டுக்கு மேக்கப் போடத் தயாராகிறார் ஜெனிலியா.
ஒரு புதிய படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார்.
2003-ஆம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஜெனிலியா.
தொடர்ந்து தமிழில் 'சச்சின்', சந்தோஷ் சுப்பிரமணியம்', 'உத்தமபுத்திரன்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்தார்.
திருமணம்
கடந்த 2012-ஆம் ஆண்டு அவருடைய காதலரான இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை மணந்து நடிப்புக்கு முழுக்குப் போட்டார் ஜெனிலியா. தமிழில் விஜய்யுடன் அவர் நடித்த 'வேலாயுதம்'தான் இவர் நடிப்பில் வெளிவந்த கடைசிப் படம்.
ஜெய் ஹோவில்...
இந்நிலையில் ஜெனிலியா சல்மான் கானின் ஜெய் ஹோவில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார். இதற்கு அவரது காதல் கணவர் ரித்தேஷும் சந்தோஷத்துடன் சம்மதித்துவிட்டார்.
2வது நாயகி
தொடர்ந்து, சல்மான்கானின் தம்பியும் தயாரிப்பாளருமான அர்பாஸ் கான் தயாரிக்கும் டாலி கி டோலி என்ற படத்தில் ஜெனிலியா 2வது நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் நாயகியாக சோனம் கபூர் நடிக்கிறார். இருப்பினும், ஜெனிலியா வந்த வாய்ப்பை தவறவிட மனமில்லாமல் ஒப்புக் கொண்டாராம்.
தமிழுக்கு வரட்டுமா...
தற்போது ஜெனிலியாவுக்கு நடிக்கும் ஆசை வந்துவிட்டதால், தொடர்ந்து நடிக்கப் போவதாகவும், தமிழுக்கு வர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.