twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மலையாளத்தில் கோபிகா பிஸி பிஸி தமிழில் வாய்ப்புகள் சடாரென குறைந்து போனதால் மலையாளத்துக்குத் திரும்பிப் போன கோபிகா அங்கு ரொம்பபிஸியாகிவிட்டார்.ஆட்டோகிராப் மூலம் உச்சத்தைப் பிடித்த கோபிகா, சடசடவென நிறையப் படங்களில் புக் ஆனார். ஸ்ரீகாந்த்துடன் நடித்த கனாகண்டேன், சிம்புவுடன் நடித்த தொடிட ஜெயா என அவர் நடித்த படங்களில் கோபிகாவின் நடிப்பு பேசப்பட்டது.அப்படியே தெலுங்கிலும் ஒரு ரவுண்டு போட்டார். அங்கு கதையைவிட அதிகம் தேவைப்படும் சாதையை மறைக்காமல்காட்டினார். அதே நேரத்தில் தமிழில் நல்ல கதையாக தேடிப் பார்த்து, மெனக்கெட்டு நடித்து வந்த கோபிகா, சில சர்ச்சைகளிலும் சிக்கினார்.அறிமுகப்படுத்திய சேரனுக்கே கால்ஷீட் இல்லை என்று அவர் மறுத்ததார்.அப்செட் ஆன சேரன், பத்மப்பிரியா என்ற பலூன் பாப்பாவைப் பிடித்து வந்து தனது தவமாய் தவமிருந்து படத்தில் நடிக்கவைத்து இப்போது பெரிய ஆளாக்கி விட்டு விட்டார்.முன்னதாக கனா கண்டேனில் நடித்தபோது நடிகர் ஸ்ரீகாந்த்துடன், கோபிகாவுக்கு காதல் என பரபரப்பு ஏற்பட்டது. இதைஇருவரும் மறுத்தாலும், இந்த வதந்தியால் ஸ்ரீகாந்த், ஸ்னேகா காதல் முறிந்ததாக இன்னொரு வதந்தியும் கிளம்பியது. இந்த பரபரப்புடன் ஸ்ரீகாந்த்துடன் கோபிகா ஆடிய கிளாமர் ஆட்டம் அவரது இமேஜுக்கு வெடி வைத்து விட்டது. குடும்பக்குத்துவிளக்கு கணக்காக கோபிகாவைப் பார்த்துக் கொண்டிருந்த பலர், கனா கண்டேனில் கோபிகாவின் கிளாமரைப் பார்த்து முகம்சுளித்தனர்.இப்படியாக சிலபல சர்ச்சைகளில் சிக்கி வந்த கோபிகா, கதை கேட்கிறேன் பேர்வழி என்று ஏகப்பட்ட குழப்பத்தை ஏற்படுத்த பலதயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வேறு ஆட்களைப் பார்க்க ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் நயன்தாராவும், ஆசினும்உள்ளே புகுந்து கோபிகாவுக்கு பெரிய ஆப்பை வைத்து எல்லா ஆபர்களையும் அள்ளத் தொடங்கினர்.இப்படியாக தமிழ் சினிமாவில் கோபிகாவின் முதல் ரவுண்டு முடிவுக்கு வந்தது. தமிழ்ப் பட வாய்ப்பு குறைந்ததால்மலையாளத்துக்குத் திரும்பினார் கோபிகா. இப்போது அங்கு அவர் தான் பிசியான நடிகை. கேரள நடிகைகள் பலரும் டப்பைமனதில் வைத்து தமிழ், தெலுங்கு என ரயில் பிடித்துக் கொண்டிருப்பதால் திரும்பிப் போன கோபிகாவுக்கு அடித்தது லக்கிபிரைஸ். ஏகப்பட்ட படங்களில் பிசியாகி விட்டார் கோபிகா. இப்போது கோபிகாவிடம் உனக்காக என்று ஒரே ஒரு படம் தான் உள்ளது.இந்தப் படத்தின் மூலம் தமிழில் தனது ரீ-எண்ட்ரியை திடமாக எடுத்து வைக்கத் திட்டமிட்டுள்ளாராம் கோபிகா.நம்பிக்கை தானே வாழ்க்கை...

    By Staff
    |
    தமிழில் வாய்ப்புகள் சடாரென குறைந்து போனதால் மலையாளத்துக்குத் திரும்பிப் போன கோபிகா அங்கு ரொம்பபிஸியாகிவிட்டார்.

    ஆட்டோகிராப் மூலம் உச்சத்தைப் பிடித்த கோபிகா, சடசடவென நிறையப் படங்களில் புக் ஆனார். ஸ்ரீகாந்த்துடன் நடித்த கனாகண்டேன், சிம்புவுடன் நடித்த தொடிட ஜெயா என அவர் நடித்த படங்களில் கோபிகாவின் நடிப்பு பேசப்பட்டது.

    அப்படியே தெலுங்கிலும் ஒரு ரவுண்டு போட்டார். அங்கு கதையைவிட அதிகம் தேவைப்படும் சாதையை மறைக்காமல்காட்டினார்.

    அதே நேரத்தில் தமிழில் நல்ல கதையாக தேடிப் பார்த்து, மெனக்கெட்டு நடித்து வந்த கோபிகா, சில சர்ச்சைகளிலும் சிக்கினார்.அறிமுகப்படுத்திய சேரனுக்கே கால்ஷீட் இல்லை என்று அவர் மறுத்ததார்.

    அப்செட் ஆன சேரன், பத்மப்பிரியா என்ற பலூன் பாப்பாவைப் பிடித்து வந்து தனது தவமாய் தவமிருந்து படத்தில் நடிக்கவைத்து இப்போது பெரிய ஆளாக்கி விட்டு விட்டார்.

    முன்னதாக கனா கண்டேனில் நடித்தபோது நடிகர் ஸ்ரீகாந்த்துடன், கோபிகாவுக்கு காதல் என பரபரப்பு ஏற்பட்டது. இதைஇருவரும் மறுத்தாலும், இந்த வதந்தியால் ஸ்ரீகாந்த், ஸ்னேகா காதல் முறிந்ததாக இன்னொரு வதந்தியும் கிளம்பியது.

    இந்த பரபரப்புடன் ஸ்ரீகாந்த்துடன் கோபிகா ஆடிய கிளாமர் ஆட்டம் அவரது இமேஜுக்கு வெடி வைத்து விட்டது. குடும்பக்குத்துவிளக்கு கணக்காக கோபிகாவைப் பார்த்துக் கொண்டிருந்த பலர், கனா கண்டேனில் கோபிகாவின் கிளாமரைப் பார்த்து முகம்சுளித்தனர்.

    இப்படியாக சிலபல சர்ச்சைகளில் சிக்கி வந்த கோபிகா, கதை கேட்கிறேன் பேர்வழி என்று ஏகப்பட்ட குழப்பத்தை ஏற்படுத்த பலதயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வேறு ஆட்களைப் பார்க்க ஆரம்பித்தனர். அந்த நேரத்தில் நயன்தாராவும், ஆசினும்உள்ளே புகுந்து கோபிகாவுக்கு பெரிய ஆப்பை வைத்து எல்லா ஆபர்களையும் அள்ளத் தொடங்கினர்.

    இப்படியாக தமிழ் சினிமாவில் கோபிகாவின் முதல் ரவுண்டு முடிவுக்கு வந்தது. தமிழ்ப் பட வாய்ப்பு குறைந்ததால்மலையாளத்துக்குத் திரும்பினார் கோபிகா. இப்போது அங்கு அவர் தான் பிசியான நடிகை. கேரள நடிகைகள் பலரும் டப்பைமனதில் வைத்து தமிழ், தெலுங்கு என ரயில் பிடித்துக் கொண்டிருப்பதால் திரும்பிப் போன கோபிகாவுக்கு அடித்தது லக்கிபிரைஸ்.

    ஏகப்பட்ட படங்களில் பிசியாகி விட்டார் கோபிகா. இப்போது கோபிகாவிடம் உனக்காக என்று ஒரே ஒரு படம் தான் உள்ளது.

    இந்தப் படத்தின் மூலம் தமிழில் தனது ரீ-எண்ட்ரியை திடமாக எடுத்து வைக்கத் திட்டமிட்டுள்ளாராம் கோபிகா.

    நம்பிக்கை தானே வாழ்க்கை...

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X