கிரேட் எஸ்கேப்: சசிகலா சிறைக்கு செல்வது குறித்து நடிகை ஸ்ரீப்ரியா
சென்னை: சசிகலா சிறைக்கு செல்வது குறித்து நடிகை ஸ்ரீப்ரியா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, திவாகரனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பளித்தது. அந்த 3 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து நடிகை ஸ்ரீப்ரியா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இறைவா
நாடகமே உலகம் நாமெல்லாம் நடிகர்கள்.இயக்குபவன் இறைவன் முக்கியமாக தொகுப்பாளன் வேண்டத காட்சிகளை தக்க சமயத்தில் வெட்டி எறிவான்,நன்றி இறைவா!
வெற்றி
மாணவரின் எழுச்சி...
தமிழனின் வெற்றி தொடர்ச்சி!
பிழைத்தது
முக்கியமாக வல்லினம் மெல்லினம் பிழைத்தது🙏🏽
காதலர் தினம்
இந்நாள் வரை தமிழர்களுக்கு காதலர் தினம் எதுவும் இல்லை. ஆனால் இன்று முதல் உலக தமிழர்கள் இந்த தினத்தை அன்போடு நினைவுகூர்வார்கள்.
எஸ்கேப்
கிரேட் எஸ்கேப்..!


Click it and Unblock the Notifications











