ஹன்சிகா மீது நயன் நலம் விரும்பிகள் காட்டம்!
நடிகை நயன்தாரா மீது காதல் கொண்டதும் பிரவுதேவா தனது மனைவி ரமலத் மற்றும் பிள்ளைகளைப் பிரிந்துவிட்டார். அவர்கள் திருமணத் தேதி இன்று அறிவிக்கப்படும், நாளை அறிவிக்கப்படும் என்று காலம் ஓடியது தான் மிச்சம். தற்போது திருமணத் தேதி அறிவிக்கப்படும் முன்பே அவர்கள் பிரிந்துவிடுவார்கள் போன்று. திருமணத்திற்குப் பிறகு நயன் நடிப்பதை பிரபுதேவா விரும்பாததால் அவர் தெலுங்கில் நடித்த ஸ்ரீ ராம ராஜ்யம் படம் தான் தன்னுடைய கடைசி படம் என்று அறிவித்தார்.
அதற்குப் பிறகு எத்தனையோ பேர் இவ்வளவு தருகிறோம், அவ்வளவு தருகிறோம் நடிக்க வாருங்கள் என்று அழைத்தும் நயன் சம்மதிக்கவே இல்லை. இந்நிலையில் தற்போது நாகர்ஜுனா நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். பிரவுதேவா தன் பாட்டுக்கு புதுப் படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவர்கள் விரைவில் பிரிந்துவிடுவார்கள் என்று கோலிவுட்டில் பரவலாகப் பேசப்படுகிறது.
இந்நிலையில் ஏற்கனவே 2 பெண்கள் உள்ள பிரபுதேவாவின் வாழ்க்கையில் கொழுக், மொழுக் நடிகை ஹன்சிகா மோத்வானி புகுந்ததால் தான் நயன்-பிரபுதேவா உறவு முறியப்போகிறது என்று நயனுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
எப்போ, ஹன்சிகாவுடன் எங்கேயும் காதல் படத்தில் பிரபுதேவா இணைந்து பணியாற்றினாரோ அப்போதே எல்லாம் முடிந்து விட்டதாகவும் அவர்கள் புலம்புகிறார்களாம்.
அது சரி..!


Click it and Unblock the Notifications












