Don't Miss!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- News புதுக்கோட்டையிலிருந்து ஷர்மிளா.. அதென்ன வித்தியாசமான "வாசனை"? குழம்பி நின்ற சென்னை சூளைமேடு போலீஸ்
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
ஹன்சிகாவுக்கு தான் எவ்வளவு நல்ல மனசு: 24வது குழந்தையை தத்தெடுப்பு
சென்னை: 23 குழந்தைகளை தத்தெடுத்துள்ள நடிகை ஹன்சிகா 24வது ஆக ஒரு சிறுவனை தத்தெடுத்து அவரின் படிப்பு செலவை ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஹன்சிகாவுக்கு தோல் மட்டும் வெள்ளை அல்ல மனசும் தான். அவர் நடிப்பை தவிர சமூக சேவையிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தன்னுடைய பிறந்தநாள் அன்று தவறாமல் ஒரு குழந்தையை தத்தெடுத்துவிடுகிறார்.
இந்நிலையில் அவர் மேலும் ஒரு சிறுவனை தத்தெடுத்துள்ளார்.
24வது
ஹன்சிகா இதுவரை 23 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். இந்நிலையில் புனேவைச் சேர்ந்த 8ம் வகுப்பு மாணவனை தத்தெடுத்து அவனின் கல்விச் செலவை தானே ஏற்றுக் கொண்டுள்ளார்.
சிறுவன் கதை
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பாலமந்திர் பள்ளியில் படிக்கும் அந்த சிறுவனின் பெற்றோர் பிரிந்து வாழ்கின்றனர். இதனால் அவனை அவனது அப்பாவின் தங்கை எடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு புற்றுநோய் தாக்கியுள்ளதால் அவர் சிறுவனை படிக்க வைத்த திணறினார். இந்நிலையில் தான் ஹன்சிகா சிறுவனை தத்தெடுத்து உள்ளார்.
மார்பக புற்றுநோய்
ஹன்சிகா புற்றுநோயால் அவதிப்படும் 10 பெண்களின் மருத்துவச் செலவிற்கும் உதவி செய்து வருகிறார். இது தவிர மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார் ஹன்சி.
ஹன்சிகா
சிறுவனை தத்தெடுத்ததை பற்றி ஹன்சிகா கூறுகையில், குழந்தைகளை தத்தெடுப்பது, அவர்களை படிக்க வைப்பது ஒரு சமூகத்தையே மாற்றும். இது ஒருவரின் கடமை ஆகும். இவ்வாறு நான் செய்வதால் மனநிறைவு ஏற்படுகிறது. நீங்களும் என்னை போன்று செய்து பாருங்களேன் என்றார்.
குழந்தை
ஹன்சிகாவையே பலர் குழந்தை போன்று இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அவர் பல குழந்தைகளை தத்தெடுத்து புது வாழ்வு அளித்து வருவது பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் ஹன்சி.