twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிம்பு - நயன் பற்றிய கேள்விகளால் வெறுப்பு - ட்விட்டரிலிருந்து வெளியேறினார் ஹன்சிகா!!

    By Shankar
    |

    சென்னை: தொடர்ந்து சிம்பு - நயன்தாரா ஜோடி சேர்வதைப் பற்றியே பலரும் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்ததால் கடுப்பான ஹன்சிகா, தனது ட்விட்டர் கணக்கு மூடிவிட்டார்.

    நடிகர், நடிகைகள் பலரும் இப்போது தங்கள் கருத்துகள், பட விவரங்களை ரசிகர்களுக்கு நேரடியாக சமூக வலைத் தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

    Hansika quits her twitter account

    ஹன்சிகாவும் ட்விட்டரில் இருந்தார். சிம்புவுடனான காதலை டுவிட்டர் மூலம்தான் அவர் வெளிப்படுத்தினார். தனது படங்கள், படப்பிடிப்பு விவரங்களையும் வெளிப்படுத்தி வந்தார். ஆனால் சிம்பு எப்போது மீண்டும் நயன்தாராவுடன் கைகோர்தாதாரோ, அன்றிலிருந்து இந்த ட்விட்டர் ஹன்சிகாவுக்கு தொல்லையாக மாறிவிட்டது.

    ரசிகர்கள் மட்டுமல்லாமல், நண்பர்களும்கூட சிம்பு - நயன்தாரா மீண்டும் சேர்ந்து நடிப்பது பற்றி ஹன்சிகாவிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்ததில் வெறுத்துப் போய்விட்டாராம் ஹன்சி.

    சிம்புவை இன்னும் காதலிக்கிறீர்களா? நயன்தாராவுடன் உங்கள் காதலன் ஜோடி சேர்வதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? சிம்பு இப்போது உங்களுடன் பேசுகிறாரா? நாங்க அப்பவே உங்களை எச்சரித்தோமே... கேட்டீர்களா? போன்ற கேள்விகளை தொடர்ந்து கேட்டு வருகிறார்களாம்.

    இதனால் கடுப்பான ஹன்சிகா, தனது ட்விட்டர் கணக்கையே க்ளோஸ் பண்ணிவிட்டார். தற்காலிகமாக விலகுவதாகவும், பிறகு பார்க்கலாம் என்றும் ட்வீட் செய்துவிட்டு வெளியேறியுள்ளார் ஹன்சிகா!

    English summary
    Actress Hansika has closed her twitter account due to the questions about Simbu - Nayanthara pair.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X