நடிகை ஹன்சிகாவின் அந்தரங்க புகைப்படங்கள் லீக்கான விவகாரம்... நாம் நினைத்தது சரி தான்!
நடிகை ஹன்சிகாவின் போன் மற்றும் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை : தனது டிவிட்டர் கணக்கு மற்றும் போன் ஹேக் செய்யப்பட்டதாக நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலேயே விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியானவர் ஹன்சிகா. குஷ்புவை ஞாபகப்படுத்தும் சாயலில் இருந்ததால், தமிழ் ரசிகர்கள் அவரை குட்டி குஷ்பு என்றே செல்லமாக அழைக்கத் தொடங்கினர்.
முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகாவிற்கு திடீரென படவாய்ப்புகள் குறைந்தன. இதனால் சில காலம் அவர் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. தற்போது அவரது நடிப்பில் மஹா படம் வெளிவர இருக்கிறது.

அந்தரங்க புகைப்படங்கள்
இந்நிலையில் உள்ளாடையுடன் இருக்கும் நடிகை ஹன்சிகாவின் போட்டோக்கள் நேற்று இணையத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின. மியாமி கடற்கரைக்கு சுற்றுலா சென்றபோது, ஹன்சிகா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இவை எனக் கூறப்படுகிறது.

ஹன்சிகா விளக்கம்
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள நடிகை ஹன்சிகா, தனது போன் மற்றும் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாகவது, "எனது போன் மற்றும் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. ஏதாவது பதிவுகள் வந்தால் பொருட்படுத்த வேண்டாம். இதனை சரிசெய்ய என்னுடைய குழு முயற்சி செய்து வருகிறது".
ஹேக் செய்யப்பட்டது.
ஹன்சிகாவின் மியாமி போட்டோக்கள் லீக்கான போதே, அவருடையே போன் ஹேக் செய்யப்பட்டிருக்க வேண்டும் என நினைத்தோம். அதுபோலவே தான் நடந்துள்ளது. நடிகர், நடிகைகளில் போன்கள் ஹேக் செய்யப்படுவதும், அவர்களுடைய அந்தரங்க புகைப்படங்கள் லீக்காவதும் தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மஹா சர்ச்சை
ஹன்சிகா தற்போது மஹா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ஹன்சிகா மற்றும் படத்தின் இயக்குனர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











