நடிப்பை மட்டும் விட்டுவிடாதே: அஞ்சலிக்கு ஹன்சிகா அட்வைஸ்

சேட்டை படத்தில் நடித்தபோது அஞ்சலியும், ஹன்சிகாவும் உயிர் தோழிகளாகிவிட்டார்களாம். அந்த படத்தில் நடிக்கையில் யார் முதல் நாயகி என்பது குறித்து அஞ்சலியும், ஹன்சிகாவும் சண்டை போடுவார்கள் என்று நினைத்திருந்தார்கள். ஆனால் அவர்கள் உல்டாவாக தோழிகளாகிவிட்டனர்.
செட்டில் இருவரும் சேர்ந்து ஆர்யாவை கலாய்த்துள்ளனர். இந்நிலையில் அஞ்சலி மாயமானபோது ஹன்சிகா சோகமாக இருந்துள்ளாராம். என் தோழி எங்கே போனாள் என்று தெரியவில்லையே என்று ஹன்சிகா கவலைப்பட்டுள்ளார். அஞ்சலி திரும்பி வந்த செய்தியை கேட்ட பிறகு தான் அவர் முகத்தில் சிரிப்பையே பார்க்க முடிந்ததாம்.
அதன் பிறகு அஞ்சலியை நேரில் பார்த்துவிட்டு வந்துள்ளார். நடந்ததெல்லாம் போகட்டும் தொடர்ந்து படங்களில் நடி, நடிப்பை மட்டும் விட்டுவிடாதே என்று அஞ்சலிக்கு அவ்வப்போது வேண்டுகோள் விடுத்து வருகிறாராம் ஹன்சி.
Comments


Click it and Unblock the Notifications