2 ஹீரோயின் படங்களில் இனி நடிக்கவே மாட்டேன்: ஹன்சிகா
சென்னை: இரண்டு நாயகி கதையாக இருந்தால் நான் நடிக்க மாட்டேன் என்று ஹன்சிகா கறாராக கூறிவிடுகிறாராம்.
கோலிவுட்டின் நம்பர் 1 நாயகியாக உள்ளார் ஹன்சிகா. இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள அவர் மெனக்கெடுகிறார். சுந்தர் சி. இயக்கத்தில் ஹன்சிகா நடித்துள்ள தீயா வேலை செய்யணும் குமாரு படம் ஹிட்டாகியுள்ளதில் அவர் மகிழ்ச்சியாக உள்ளார்.
அதே சமயம் சிங்கம் 2 படத்தில் 2 நாயகிகளில் ஒருவராக நடித்தது ஹன்சிகாவுக்கு சற்று பயத்தை அளித்துள்ளதாம்.

சாகும் நாயகி
சிங்கம் 2 படத்தில் என்ன தான் ஹன்சிகா நடித்திருந்தாலும் அவர் சூர்யாவை ஒன்சைடாக காதலித்துவிட்டு இறந்துவிடுகிறார். படத்தில் அனுஷ்கா தான் நிலைத்து நிற்கிறார்.

மார்க்கெட்டை கவுத்துடுவாங்களோ
2 நாயகிகள் உள்ள படங்களில் நடித்தால் மார்க்கெட் படுத்துவிடும் என்று நலம் விரும்பிகள் ஹன்சிகாவிடம் கூறியுள்ளனர். அவரும் யோசித்துப் பார்த்துவிட்டு அவர்கள் சொல்வது உண்மை தான் என்பதை உணர்ந்துள்ளார்.

2 ஹீரோயினா ஓடிடுங்க
2 ஹீரோயின் படங்களில் நடிக்குமாறு ஹன்சிகாவிடம் யாராவது கேட்டால் அதெல்லாம் முடியாது என்று மறுத்துவிடுகிறாராம்.


Click it and Unblock the Notifications











