Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அட.. அதுக்குள்ள சுஷ்மிதாவுக்கு 40 வயசாயிருச்சே!
மும்பை: பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றவரான நடிகை சுஷ்மிதா சென் இன்று தனது 40வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
1975ம் ஆண்டு ஹைதராபாத் நகரில் பிறந்தவர் சுஷ்மிதா சென். 1994ம் ஆண்டு, தனது பதினெட்டாவது வயதில், பெமினா மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற சுஷ்மிதா, அதே ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டம் வென்றார்.
பின்னர் நடிகையான சுஷ்மிதா சென், குழந்தைகளைத் தத்தெடுத்து சமூகசேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.
மிஸ்.யுனிவர்ஸ்...
1994ம் ஆண்டு மிஸ்.யுனிவர்ஸ் பட்டத்தை வென்றதன் மூலம், இந்தியாவிலிருந்து அந்தப் பட்டத்தைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமைக்குரியவர் ஆனார் சுஷ்மிதா சென்.
கவிதை பாடும் கவிதை...
நடிகையான சுஷ்மிதா சென்னிற்கு கவிதைகள் இயற்றுவதும் மிகவும் பிடிக்கும். அவரது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அவர் கவிதை எழுதுவார் என்பது தெரியும்.
அழகிய கவுன்...
அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றின் போது சுஷ்மிதா அணிந்திருந்த கவுன் அவரது தாயாரால் டிசைன் செய்யப்பட்டது. அதனை பிரபலமில்லாத அவரது டெய்லர் மீனா என்பவர் உருவாக்கி இருந்தார்.
தத்துக் குழந்தைகள்...
ரினே மற்றும் அலிஷா என இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார் சுஷ்மிதா. இவர்களில் ரினேவுக்கு போதிய மனவளர்ச்சி இல்லை என மருத்துவர்கள் கூறியபோதும், சுஷ்மிதா அவரைத் தத்தெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகையான கதை...
பத்திரிகைத் துறையில் பணியாற்ற வேண்டும் என்பதே சுஷ்மிதாவின் விருப்பமாக இருந்தது. ஆனால், தஸ்தக் படம் மூலம் அவர் நடிகையாகி விட்டார்.