Don't Miss!
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எதியூரப்பா மகனுடன் தொடர்பில்லை.. மறுக்கிறார் நடிகை ஹரிப்ரியா
தமிழ் மற்றும் கன்னடத்தில் பிரபலமானவர் நடிகை ஹரிப்ரியா. இவர் தமிழில் அர்ஜுனுடன் 'வல்லக்கோட்டை' படத்தில் நடித்தார். கரணுடன் 'கனகவேல் காக்க' படத்திலும், சேரனுடன் 'முரண்' படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
ஹரிப்ரியா வீடு பெங்களூரில் உள்ளது. அந்த வீட்டில் சி.பி.ஐ. போலீசார் நேற்று அதிரடியாக புகுந்து சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது.
சுரங்க ஊழல் புகாரில் சிக்கிய கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஒரு குழுவினர் ஹரிப்ரியா வீட்டில் புகுந்து சோதனை போட்டதாகக் கூறப்பட்டது.
எதியூரப்பாவின் மகன் விஜயேந்திரா வீட்டிலும் சோதனை நடந்தது. விஜயேந்திராவுக்கும், ஹரிப்ரியாவுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாகவும் எனவே தான் ஹரிப்ரியா வீட்டில் இந்த சோதனை நடந்ததாகவும் தகவல் வெளியானது.
ஆனால் இந்த செய்தியை ஹரிப்ரியா அடியோடு மறுத்தார்.
அவர் கூறுகையில், "என் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடந்தததாக வெளியான செய்தியை பார்த்து அதிர்ச்சியானேன். அப்படி எந்த சோதனையும் நடக்கவில்லை. எதியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுடன் எனக்கு தொடர்பில்லை. அது வதந்தியே.
அவரைப் பற்றி இதற்கு முன் கேள்விப்பட்டதே இல்லை. நேரில் சந்தித்ததும் இல்லை," என்றார்.