கொடுமை தாங்க முடியாமல் கணவரை பிரிந்துவிட்டாரா பிரபல டிவி நடிகை?
மும்பை: தொலைக்காட்சி நடிகை சோமியா சேத் இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள போஸ்டை பார்த்தால் அவரை கணவர் கொடுமைப்படுத்தியது போன்று உள்ளது.
நவ்யா இந்தி தொலைக்காட்சி தொடர் மூலம் ஏகத்திற்கும் பிரபலமானவர் சோமியா சேத். அவர் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி அருண் கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார்.
கடந்த ஆண்டு அவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் போஸ்டுகள் ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது.
நாடு
8 ஆண்டுகளுக்கு முன்பு நான் நவ்யா தொடரில் நடித்தபோது எனக்கு வயது 21. காதல் மீது நம்பிக்கை ஏற்படுத்த விரும்பினேன். என் நாட்டில் இருந்தேன். என் பெற்றோர் என்னை பாதுகாத்தார்கள். வளர்ந்த பிறகு வன்முறை, போதைப் பொருள், வெறுப்பு, பொறாமை, அநீதி, அடி அனைத்தையும் பார்த்துவிட்டேன். கேவலமான இதயத்துடன் உள்ள அழகிய முகங்களை பார்க்கிறேன். பிரின்ஸ் சார்மிங் என்பது இல்லை என்று சோமியா போஸ்ட் போட்டுள்ளார்.

கொடுமை
சோமியா இன்ஸ்டாகிராமில் தனது கணவரின் புகைப்படங்களை வெளியிடவில்லை. இந்நிலையில் அவர் போட்டுள்ள போஸ்ட்டை பார்த்தவர்கள் கணவர் அவரை கொடுமைப்படுத்துகிறார் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
புது வாழ்க்கை
சோமியா சேத்தின் இந்த போஸ்ட்டை பார்த்தால் கொடுமையில் இருந்து தப்பி தனியாக புது வாழ்க்கை துவங்கியுள்ளது போன்று தெரிகிறது.
புது வீடு
புது வேலை கிடைத்து மகன் ஏடனுடன் புது வீட்டில் குடியேறியுள்ளார் சோமியா சேத். அவரின் போஸ்டுகளை பார்த்தால் அவர் கணவரை பிரிந்து விட்டதையே தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications











