Don't Miss!
- News மசூதியை நோக்கி அம்பு விடுவது போல சைகை செய்த ஹைதராபாத் பாஜக வேட்பாளர்! எதிர்ப்பால் மன்னிப்பு கோரினார்
- Automobiles 35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
- Technology போட்டு தாக்கும் BSNL.. 300 ரூபாய்க்கு இப்படியொரு ரீசார்ஜ் திட்டமா? யாருக்கெல்லாம் இது பெஸ்ட் பிளான் தெரியமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Lifestyle உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகை ஹன்சிகா மீதான புகார்... போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
நடிகை ஹன்சிகா ஆகியோர் மீதான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: இயக்குனர் ஜமீல், நடிகை ஹன்சிகா ஆகியோர் மீதான புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடிக்கும் படம் மஹா. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் காசி நகரின் பிண்ணனியில் காவி உடையணிந்த பெண் துறவியாக இருக்கும் ஹன்சிகா,புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றது.
இந்த போஸ்டர், இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், பெண் துறவிகளையும் கொச்சைப்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, சென்னை மாநகர காவல் ஆணையரிடம் இந்து மக்கள் முன்னணியின் அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் புகார் அளித்திருந்தார். அதில் போஸ்டர் காட்சியை அமைத்த இயக்குனர் ஜமீல் மீதும், அதில் இடம்பெற்றிருந்த நடிகை ஹன்சிகா மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.
ஆனால் போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஒரு மாதத்திற்கு மேலாகியும் புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், நாரயணன் அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இரண்டு வாரத்தில் பதிலளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார்.
போலீசாக நடிக்க பிட்டான உடல் தான் காரணமா.... நடிகர் அருண் விஜய் பதில்!