Don't Miss!
- Education குரூப்-1 வேலைக்கான நேர்முகத் தேர்வு முடிவுகள் ரிலீஸ்...குஷியில் தேர்வர்கள்...!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
'குமாரண்ணா' பூஜா காந்திக்கு வீடு வாங்கி கொடுத்தாரா?
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா காந்தி அண்மையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியின் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு மாவட்டம், மாவட்டமாகச் சென்று பொதுக் கூட்டங்களில் பேசினார். அப்போது அவர் குமாரண்ணா மூலம் தனக்கு புதிய வீடு கிடைத்துள்ளது என்று கூட்டந்தோறும் கூறி வந்தார். பூஜா கட்சித் தலைவர் குமாரசாமியை குமாரண்ணா என்று தான் அழைப்பார்.
அடடா, மறுபடியும் குமாரசாமிக்கு சிக்கல் வந்து விட்டதே என்று நினைத்த பத்திரிகைக்கார்கள் எங்கே அந்த வீடு என்று வலை வீசி லென்ஸ் கண்களோடு தேட ஆரம்பித்தனர். பாஜகவினருக்கும் கூட அந்தப் புது வீடு குறித்து 'ஆர்வம்' பிறந்தது. மக்களும் கூட மறுபடியுமா என்று குமாரசாமி குறித்த 'ரீவைண்ட்' சிந்தனைக்குப் போக ஆரம்பித்தனர்.
இந்த குழப்பமெல்லாம் பூஜா காதுக்கும் போனது. பதறிப் போன அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதாகப்பட்டது என்னவென்றால்,
ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி எனக்கு புதிய வீடு வாங்கிக் கொடுத்துள்ளதாக பத்திரிக்கையில் வெளியான செய்தியைப் பார்த்தேன். நான் வடநாட்டுப் பெண். எனக்கு அவ்வளவாக கன்னடம் வராது. ஜனதா தளம் என்னும் பெரிய குடும்பத்தில் இணைந்ததைத் தான் நான் அப்படி கூறினேன்.
அதாவது புது குடும்பம் கிடைத்திருக்கு என்பதற்குப் பதிலாக புது வீடு கிடைத்துள்ளது என்று பாஷை தெரியாமல் மாற்றிக் கூறிவிட்டேன். அதனாலேயே இத்தனை குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எங்கள் குடும்பத்திற்கென்று சொந்தமாக வீடு உள்ளது. அந்த வீட்டில் தான் நான் எனது பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் வசித்து வருகிறேன் என்றார்.
அப்பாடா, குமாரசாமி தப்பித்தாரப்பா...!