Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'குமாரண்ணா' பூஜா காந்திக்கு வீடு வாங்கி கொடுத்தாரா?
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா காந்தி அண்மையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். அக்கட்சியின் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு மாவட்டம், மாவட்டமாகச் சென்று பொதுக் கூட்டங்களில் பேசினார். அப்போது அவர் குமாரண்ணா மூலம் தனக்கு புதிய வீடு கிடைத்துள்ளது என்று கூட்டந்தோறும் கூறி வந்தார். பூஜா கட்சித் தலைவர் குமாரசாமியை குமாரண்ணா என்று தான் அழைப்பார்.
அடடா, மறுபடியும் குமாரசாமிக்கு சிக்கல் வந்து விட்டதே என்று நினைத்த பத்திரிகைக்கார்கள் எங்கே அந்த வீடு என்று வலை வீசி லென்ஸ் கண்களோடு தேட ஆரம்பித்தனர். பாஜகவினருக்கும் கூட அந்தப் புது வீடு குறித்து 'ஆர்வம்' பிறந்தது. மக்களும் கூட மறுபடியுமா என்று குமாரசாமி குறித்த 'ரீவைண்ட்' சிந்தனைக்குப் போக ஆரம்பித்தனர்.
இந்த குழப்பமெல்லாம் பூஜா காதுக்கும் போனது. பதறிப் போன அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதாகப்பட்டது என்னவென்றால்,
ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி எனக்கு புதிய வீடு வாங்கிக் கொடுத்துள்ளதாக பத்திரிக்கையில் வெளியான செய்தியைப் பார்த்தேன். நான் வடநாட்டுப் பெண். எனக்கு அவ்வளவாக கன்னடம் வராது. ஜனதா தளம் என்னும் பெரிய குடும்பத்தில் இணைந்ததைத் தான் நான் அப்படி கூறினேன்.
அதாவது புது குடும்பம் கிடைத்திருக்கு என்பதற்குப் பதிலாக புது வீடு கிடைத்துள்ளது என்று பாஷை தெரியாமல் மாற்றிக் கூறிவிட்டேன். அதனாலேயே இத்தனை குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எங்கள் குடும்பத்திற்கென்று சொந்தமாக வீடு உள்ளது. அந்த வீட்டில் தான் நான் எனது பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் வசித்து வருகிறேன் என்றார்.
அப்பாடா, குமாரசாமி தப்பித்தாரப்பா...!