Don't Miss!
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- News ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
காணவில்லை போஸ்டர் அடித்த பிறகு ஒரு வழியாக தொகுதிக்கு வந்த நடிகை ஹேமமாலினி
மதுரா: காணவில்லை என்று மதுரா தொகுதியில் போஸ்டர் அடிக்கும் அளவுக்கு சர்ச்சையை ஏற்படுத்திய பாஜகவின் நடிகை ஹேமமாலினி, ஒரு வழியாக தனது தொகுதிக்கு விசிட் அடித்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் நடிகை ஹேமமாலினி உத்தர பிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற பிறகு அவர் ஒரேயொரு முறை மட்டும் தான் மதுராவுக்கு சென்றார்.
இதனால் கடுப்பான மக்கள் ஹேமமாலினியை காணவில்லை என்று போஸ்டர் அடித்து ஒட்டினர்.
பட்ஜெட்
தொகுதிக்கு தான் செல்லவில்லை என்று பார்த்தால் ஹேமாவை பட்ஜெட் கூட்டத் தொடர் முழுவதும் நாடாளுமன்றத்திலும் ஹேமமாலினியை பார்க்க முடியவில்லை.
அமெரிக்கா
ஹேமமாலினி பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாமல் அமெரிக்காவில் டான்ஸ் நிகழ்ச்சிகள் நடத்த சென்றுவிட்டார். இது குறித்து அவர் பாஜக தலைமையிடம் ஏற்கனவே தெரிவித்திருந்தாராம்.
டூர்
டான்ஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஊர் திரும்பிய ஹேமமாலினி ஒரு வழியாக தொகுதி பக்கம் சென்றுள்ளார். அவர் மதுராவில் உள்ள கட்சி தொண்டர்களை சந்தித்து பேசினார்.
விவசாயி
ஹேமா கட்சியினருடன் பேசியதை பார்த்த விவசாயி ஒருவர் கூறுகையில், வாக்கு கேட்டு எங்களிடம் வருவீர்கள், நாங்களும் உங்களுக்கு பொறுப்பை தருவோம். ஆனால் தற்போது உங்களுக்கு எங்களை சந்தித்து பேசக் கூட தோன்றவில்லையா? என்றார்.
இப்போ தானே
அதற்கு, இப்போது தானே மதுராவில் என் பயணம் துவங்கியுள்ளது. அதற்குள் பொறுமையை இழந்தால் எப்படி என்று பதிலளித்தார் ஹேமமாலினி.