Don't Miss!
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பூனம் பாண்டேவிடமிருந்து ஐபோனை திருடிய பலே கும்பல்!
இதுகுறித்து ஓஷிவாரா போலீஸ் நிலைய காவலர்கள் கூறுகையில், மேற்கு அந்தேரியில் உள்ள ஆதர்ஷ் நகர் சிக்னலில் பூனம் பாண்டேவின் கார் டிராபிக் ஜாமில் மாட்டி நின்றுள்ளது. அப்போதுதான் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் படு நூதனமாக பாண்டேவை ஏமாற்றி அவரது ஐபோனை தூக்கிக் கொண்டு பறந்துள்ளனர்.
இதுபோன்ற திருட்டு சமீப காலமாக மும்பையில் அதிகரித்து வருகிறது. பாண்டேவிடமிருந்து ரூ. 45,000 மதிப்புள்ள ஐபோன்4-ஐ அக்கும்பல் திருடிச் சென்றுள்ளது.
தனது நண்பருக்குச் சொந்தமான வேகன் ஆர் காரில் பாண்டே அப்போது பயணித்துள்ளார். காரேகானிலிருந்து கோகிலாபென் மருத்துவமனைக்குப் போய்க் கொண்டிருந்தபோதுதான் இந்த திருட்டு நடந்துள்ளது.
படு நூதனமாக இந்த திருட்டை அந்தக் கும்பல் செய்துள்ளது. அதாவது பாண்டே காருக்கு அருகில் வந்து நின்ற அந்த நபர்கள், கார்க் கதவை தட்டியுள்ளனர். கண்ணாடியை பாண்டே இறக்கி விட்டு என்ன என்று கேட்டபோது காருக்குப் பி்ன்னால் இருந்த இன்னொரு மோட்டார் சைக்கிளைக் காட்டி அதில் இருந்தவர்கள் உங்களை திட்டுவதாக பேசுவதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து பாண்டே என்னவோ, ஏதோ என்று போய்ப் பார்த்துள்ளார். அதைப் பயன்படுத்திக் கொண்டு காரில் இருந்த ஐபோனை தூக்கிக் கொண்டு பறந்து விட்னராம் அந்த திருடர்கள்.
பூனம் பாண்டே அந்த ஐபோனில் என்னென்னத்தைப் போட்டு வைத்திருக்கிறாரோ...