Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
'சீண்ட ஆள் இல்லையா?' - ப்ரியாமணிக்கு வந்த நிலைமையைப் பாருங்க!
'என்ன ஒத்தைப் பாட்டுக்கு இறங்கி வந்துட்டீங்க... சீண்ட ஆளில்லையா?' - ஒரு பிரஸ் மீட்டில் ப்ரியாமணியைப் பார்த்து நிருபர் ஒருவர் கேட்ட கேள்வி இது.
இந்தக் கேள்வியால் நிலைகுலைந்த ப்ரியாமணி கட்டுப்பாட்டை இழந்து நிருபரை அடிக்கப் பாய்ந்து, பின் மன்னிப்புக் கேட்டது தனிக்கதை.
ஆனால் ஏன் ப்ரியாமணிக்கு இப்படி ஒரு நிலை வந்தது?
பருத்தி வீரனின் முத்தழகு கேரக்டர்தான் ப்ரியாமணிக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. ஆனால் அதன் பிறகு அந்த மாதிரி கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்கள் வந்தன. கண்ணை மூடிக் கொண்டு அத்தனைப் படங்களையும் வேண்டாம் என்றவர், கிட்டத்தட்ட தமிழ்ப் படங்களில் நடிப்பதையே தவிர்த்தார்.
சில ஆண்டுகள்தான்... தமிழ் சினிமா ப்ரியாமணியைக் கண்டுகொள்ளவே இல்லை. தெலுங்கில் மேக்ஸிமம் கவர்ச்சி காட்டப் போவதாகக் கூறி சில படங்கள் நடித்தார். டோலிவுட்டுக்கு அம்மணி போரடித்திவிட அங்கும் படங்கள் இல்லை.
மணிரத்னம் படத்தில் நடிக்கிறேன்.. இனி இந்தி வாய்ப்புகள் குவியும் பாருங்கள் என்றார். ஆனால் ராவணன் கவிழ்த்ததில் பெரும் பள்ளத்தாக்கில் விழுந்த மாதிரி ஆகிவிட்டது.
ப்ரியாமணிக்கு எப்போது திருமணம் என்று பலரும் கேட்க ஆரம்பித்துள்ள நேரத்தில், மீண்டும் சினிமா வாய்ப்புக்காக தனது ஆல்பங்களைக் காட்ட ஆரம்பித்துள்ளார்.
தெலுங்கில் பன்னி (Bunny) என்ற படத்தில் ஒரு குத்துப்பாட்டு ஆட்டம் போட்டுள்ளாராம். இதுதான் தலைப்பில் நீங்கள் படித்த கேள்விக்குக் காரணம்!