Don't Miss!
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- News இதுதான் நம்ம தமிழ்நாடு.. மூக்கு மேல் விரல் வைத்த ஈரோடு.. புது டிரஸ்ஸில்.. யாரிந்த 3 பெண்கள்.. சபாஷ்
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'சீண்ட ஆள் இல்லையா?' - ப்ரியாமணிக்கு வந்த நிலைமையைப் பாருங்க!
'என்ன ஒத்தைப் பாட்டுக்கு இறங்கி வந்துட்டீங்க... சீண்ட ஆளில்லையா?' - ஒரு பிரஸ் மீட்டில் ப்ரியாமணியைப் பார்த்து நிருபர் ஒருவர் கேட்ட கேள்வி இது.
இந்தக் கேள்வியால் நிலைகுலைந்த ப்ரியாமணி கட்டுப்பாட்டை இழந்து நிருபரை அடிக்கப் பாய்ந்து, பின் மன்னிப்புக் கேட்டது தனிக்கதை.
ஆனால் ஏன் ப்ரியாமணிக்கு இப்படி ஒரு நிலை வந்தது?
பருத்தி வீரனின் முத்தழகு கேரக்டர்தான் ப்ரியாமணிக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது. ஆனால் அதன் பிறகு அந்த மாதிரி கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்கள் வந்தன. கண்ணை மூடிக் கொண்டு அத்தனைப் படங்களையும் வேண்டாம் என்றவர், கிட்டத்தட்ட தமிழ்ப் படங்களில் நடிப்பதையே தவிர்த்தார்.
சில ஆண்டுகள்தான்... தமிழ் சினிமா ப்ரியாமணியைக் கண்டுகொள்ளவே இல்லை. தெலுங்கில் மேக்ஸிமம் கவர்ச்சி காட்டப் போவதாகக் கூறி சில படங்கள் நடித்தார். டோலிவுட்டுக்கு அம்மணி போரடித்திவிட அங்கும் படங்கள் இல்லை.
மணிரத்னம் படத்தில் நடிக்கிறேன்.. இனி இந்தி வாய்ப்புகள் குவியும் பாருங்கள் என்றார். ஆனால் ராவணன் கவிழ்த்ததில் பெரும் பள்ளத்தாக்கில் விழுந்த மாதிரி ஆகிவிட்டது.
ப்ரியாமணிக்கு எப்போது திருமணம் என்று பலரும் கேட்க ஆரம்பித்துள்ள நேரத்தில், மீண்டும் சினிமா வாய்ப்புக்காக தனது ஆல்பங்களைக் காட்ட ஆரம்பித்துள்ளார்.
தெலுங்கில் பன்னி (Bunny) என்ற படத்தில் ஒரு குத்துப்பாட்டு ஆட்டம் போட்டுள்ளாராம். இதுதான் தலைப்பில் நீங்கள் படித்த கேள்விக்குக் காரணம்!