Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நான் சாக்லேட் தோலால் மூடப்பட்ட புயல்.. கிளாமர் போட்டோவை போட்டு ஆர்ப்பரிக்கும் சர்ச்சை நடிகை!
சென்னை: தான் சாக்லேட் தோலால் மூடப்பட்ட புயல் என ஆர்ப்பரித்திருக்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி.
Recommended Video
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு வரும் 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில மாநிலங்களில் இன்று முதல் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
ஆனால் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நடிகைகள் பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.
இதுதான் குவரைன்டைன் நவரசமா? அழகழகான எக்ஸ்பிரசன்களில் ஸ்ருதிஹாசன்.. ரசித்துக் கொண்டாடும் ஃபேன்ஸ்!
ஆபாச கமென்ட்
அந்த வகையில் வீட்டுக்குள்ளேயே இருக்கும் நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து பேஸ்புக்கில் தனது போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். அதோடு ஆபாசமான கமென்ட்டுகளையும் பதிவிட்டு வருகிறார் ஸ்ரீரெட்டி. அரைகுறை ஆடையில் இருக்கும் போட்டோக்களுக்கு ஸ்ரீரெட்டி போடும் கமென்ட்டுகள் போட்டோக்களை விட ஆபாசமாக இருந்து வருகிறது.
பாரை மிஸ் செய்கிறேன்
அவரது போட்டோக்களுக்கு நெட்டிசன்களும் படு கேவலமாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால் தனது வீட்டில் உள்ள ஸ்பெஷல் பாரையும் சரக்கையும் மிஸ் செய்வதாக தான் குடிக்கும் வீடியோவை ஷேர் செய்திருந்தார். மேலும் விரைவில் தான் தனது பாருக்கு செல்வேன் என்று நம்புவதாகவும் கூறியிருந்தார்.
வைரம் போல..
இந்நிலையில் தற்போது ஒரே தத்துவமாக பேசியிருக்கிறார் ஸ்ரீரெட்டி. தனது கிளாமர் போட்டோவை ஷேர் செய்துள்ள ஸ்ரீரெட்டி, என் பிரகாசமான எதிர்காலத்தை எதிர்பார்த்திருக்கிறேன், இழிவான இருண்ட கோழைகளின் உலகத்திலிருந்து வெளிவந்து.. இப்போது நான் ஒரு வைரம் போல ஜொலிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
ஒரே நிறம்
மற்றொரு போட்டோவில் தன்னுடைய முன்னழகை காட்டியிருக்கும் ஸ்ரீரெட்டி.. நான் சாக்லேட் தோலால் மூடப்பட்ட புயல் என்றும் ஆனால் செக்ஸுக்காக அலைபவர்களுக்கு சதை என்பது ஒரே நிறமாகத்தான் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
அதை சாப்பிடுகிறார்கள்
என்னை யார் ஜட்ஜ் செய்கிறார்களோ அவர்கள் சாலை ஓரத்தில் கிடப்பதை சாப்பிடுகிறார்கள்.. ஆனால் நான் என் வாழ்க்கையை வெற்றிகரமாக வைத்திருக்க எனது ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். ஸ்ரீரெட்டியின் இந்த பதிவுகளை அவரது ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.