நான் கேன்சரால் மறுபிறவி எடுத்திருக்கிறேன் - மனீஷா
மும்பை: புற்று நோய்க்காக நியூயார்க்கில் சிகிச்சை பெற்று வந்த நடிகை மனிஷாகொய்ரலா தற்போது பூரண குணமடைந்துள்ளார்.
42 வயதான மனிஷாகொய்ரலா சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். பின்னர் தொடர் சிகிச்சைக்காக அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28-ந்தேதி மும்பையில் உள்ள ஜஸ்லோக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சைக்கு பின்னர் நடிகை மனிஷா கொய்ரலா தற்போது குணம் அடைந்து உள்ளார்.

டெலிபோன் மணி போல் சிரித்த நடிகை...
பிரபல இந்தி நடிகை மனிஷாகொய்ரலா தமிழில் பம்பாய், பாபா, இந்தியன், முதல்வன் ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.

கேன்சரில் அவதி...
மனிஷாகொய்ரலா சமீபத்தில் புற்றுநோயால் அவதிப்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். பின் தொடர் சிகிச்சைக்காக மும்பையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

நலம். நலமறிய ஆவல்...
இதுதொடர்பாக சமூக வலைதளமான பேஸ்புக் தனது பக்கத்தில் மனிஷாகொய்ரலா கூறுகையில் அனைவரின் பிரார்த்தனையாலும் ஆசீர்வாதத்திலும் எனது உடல் நிலை சீரடைந்துள்ளது.

விரைவில் சந்திப்பேன்...
படிப்படியாக புற்றுநோயில் இருந்து நான் தற்போது முழுமையாக விடுபட்டு உள்ளேன். நான் விரைவில் உங்களை சந்திக்க வருவேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.


Click it and Unblock the Notifications











