Don't Miss!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- News விவசாயிகளுக்கு நல்ல சேதி.. பயிர்க்கடன் தேவை? "அடங்கல்" இருக்கா? கூட்டுறவு வங்கிகளில் சூப்பர் மாற்றம்
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா படத்திற்கு என்னை வைத்து விளம்பரம் தேடுகின்றனர் - இஷாரா
சென்னை: நான் எங்கும் தலைமறைவாக இல்லை என்று சதுரங்க வேட்டை நாயகி இஷாரா கூறியிருக்கிறார்.
எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா படத்தின் நாயகி இஷாரா தலைமறைவாகி விட்டதாக, படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இருவரும் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில் இந்தப் படத்தின் இயக்குநர் தொல்லை தங்க முடியவில்லை. அதனால் இப்படத்தில் நடிக்க விருப்பமில்லையென்று நடிகை இஷாரா தெரிவித்திருக்கிறார்.
இஷாரா
சதுரங்க வேட்டை படத்தில் அறிமுகமான இஷாராவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைக்க, தற்போது எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா என்ற படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி புகழ் அகிலுக்கு ஜோடியாக இஷாரா நடிக்கும் இப்படத்தை கேவின் ஜோசப் இயக்க, டிஎன் 75 கே.கே கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக ஜோசப் லாரன்ஸ் தயாரித்து வருகிறார்.
தலைமறைவு
/news/actress-ishara-absconding-040394.html
இஷாரா
இந்நிலையில் நடிகை இஷாரா தான் எங்கும் தலைமறைவாக இல்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் ''இப்படத்தின் இயக்குநர் என்னிடம் மோசமாக நடந்து கொண்டார். படப்பிடிப்பில் அனைவர் முன்னிலையிலும் என்னை வாடி, போடி என்று அழைத்தார். மேலும் ஒரு காட்சியை விளக்கும்போது மிகவும் மோசமாக அதனை சித்தரிப்பார். எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களே தவிர யாரும் எனக்கு உதவி செய்யவில்லை.
படப்பிடிப்பு
இந்தப் படத்திற்காக நான் கொடுத்த தேதிகளில் மொத்தமே 2 நாட்கள் தான் படப்பிடிப்பை நடத்தினர்.என்னுடைய தேதிகளை வீணடித்து விட்டு இப்போது படப்பிடிப்பிற்கு வரச்சொல்கிறார்கள். இந்தப்படம் தவிர மேலும் 4 படங்களில் நான் நடித்து வருகிறேன். மற்ற படங்களின் இயக்குநர்கள் இதுபோல நடந்து கொள்ளவில்லை.
விளம்பரம்
இந்தப் படத்துக்கு விளம்பரம் தேட என்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இந்தப் படத்தினால் என்னுடைய பெயர் பாழாகி விட்டது. சொல்லப்போனால் இதுவரை நான் மகளிர் பிரிவில் புகார் கொடுக்கவில்லை. இதற்காக அவர்கள் தான் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்.
கேவின்
இப்படத்தின் இயக்குநர் கேவின் '' நாங்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டினார். நானும் சட்டரீதியாக இப்பிரச்சினையை எதிர்கொள்கிறேன் என்று கூறிவிட்டேன்'' என்று தெரிவித்திருக்கிறார்.
-
SMS ஹீரோயின் இப்போ எப்படி இருக்காரு தெரியுமா?.. ஐஸ்வர்யா ஷங்கர் திருமணத்தில் அவரே எடுத்த வீடியோ இதோ!
-
Pandian stores 2 serial: சரவணன்னு ஒரு உத்தமன்.. தேடிய தம்பிகள்.. உற்சாகத்தில் பாண்டியன்!
-
புஷ்பா 2 ஓடிடி உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?.. பல டாப் நடிகர்கள் லைஃப் டைம் வசூலே இவ்ளோ இல்லையே!