Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மீடூவில் புகார் கூறியதால் சினிமாவில் ஒதுக்கப்பட்ட பிரபல நடிகை.. புதிய அவதாரம்.. அதிரடி முடிவு!
திருவனந்தபுரம்: மீடூவில் புகார் கூறியதால் தனக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்குவதாக பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.
பிரபல மலையாள .நடிகை பார்வதி. மலையாள சினிமாவில் முன்னணி நடிகையான இவர், தமிழில் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மலையாள சினிமாவை சேர்ந்த நடிகை ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்புக்கு எதிராக குரல் கொடுத்த பார்வதி, அவர் மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
இயக்குநராகும் ஸ்லம்டாக் மில்லியனர் ஹீரோ.. இந்தியாவில் ஷூட்டிங் செய்ய திட்டம்.. என்ன படம் தெரியுமா?
மலையாள நடிகைகள்
இதுதொடர்பாக மலையாள நடிகர் சங்கத்திற்கு தனது கண்டனங்களையும் தெரிவித்தார் பார்வதி. மேலும் நடிகைகள் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் அளிக்க மலையாள நடிகைகள் தொடங்கிய அமைப்பிலும் பொறுப்பில் இருந்தார் பார்வதி.
செம கடுப்பு
அவ்வப்போது நடிகைகளின் பாலியல் தொல்லை தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கும் குரல் கொடுத்து வந்தார் பார்வதி. இதனால் நடிகை பார்வதி மீது செம கடுப்பில் இருந்த நடிகர்கள் அவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஓராண்டாக வாய்ப்பில்லை
இதன் காரணமாக கடந்த ஓராண்டாக எந்த புதிய படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் முடங்கியிருக்கிறார் நடிகை பார்வதி. இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நடிகை பார்வதி, நடிகைகள் பாதுகாப்புக்காக மலையாள திரைப்பட பெண்கள் கூட்டமைப்பை உருவாக்கினோம்.
பாலிவுட்டில் வாய்ப்பு
அந்த அமைப்பை உருவாக்கிய பிறகு எனக்கு புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு தராமல் ஒதுக்குகிறார்கள். பாலிவுட்டில் மீடூவில் புகார் கூறும் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது.
பார்வதி கவலை
ஆனால் மலையாள சினிமாவில் வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்குகிறார்கள். பல வெற்றி படங்களை கொடுத்த எனக்கு ஒரு வருடமாக புதிய படங்கள் இல்லை என கவலையுடன் தெரிவித்திருக்கிறார்.
கதைகள் தயார்
பட வாய்ப்புகள் கிடைக்காததால் இயக்குநராக அவதாரம் எடுக்க முடிவு செய்திருக்கிறார் பார்வதி. இதற்காக இரண்டு கதைகளுடன் தயாராக உள்ளாராம் நடிகை பார்வதி.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!