நானே விர்ஜின் இல்ல.. அவரபத்தி ஏன் பேசனும் புதிதாய் திருமணம் முடித்த பிரபல நடிகை போட்ட புதிய குண்டு!
சென்னை: புதிதாய் திருமணம் முடித்த பிரபல நடிகை தானே கன்னித்தன்மையுடன் இல்லை என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இனிது இனிது, மவுனம் பேசியதே படங்களில் நடித்ததுடன் பல்வேறு இந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் மராத்தி படங்களில் நடித்திருப்பவர் நேஹா பென்ட்சே.
Recommended Video
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சீரியல்கள் என பிஸியாக உள்ளார் நேகா. இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி ஷர்துல் பயாஸ் என்ற தொழில் அதிபரை நேகா திருமணம் செய்து கொண்டார்.
திருமண வரவேற்பு
பூனேவில் மராத்திய முறைப்படி இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அண்மையில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
உடை குறித்து விமர்சனம்
இதில் மார்பு, தொடை எல்லாத்தையும் காட்டியப்படி பங்கேற்றார் நேகா. மணப்பெண் இப்படியா உடை உடுத்துவது விமர்சனங்கள் எழுந்தன.
2 முறை திருமணம்
இந்நிலையில் நேகா - ஷர்துல் திருமணம் குறித்து பல தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. அதாவது
ஷர்துல் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர்.
என்ன அவசியம்?
2 குழந்தைகளுக்கு தந்தையாகவும் இருக்கிறார். அவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார் நேகா பென்ட்சே. இதனையறிந்த ரசிகர்கள், இப்படி மூன்றாம் தாரமாய் வாழ்க்கைப்பட என்ன அவசியம் என கேள்வி எழுப்பி வந்தனர்.
வாயை அடைத்தார்
அதற்கு மூன்றாம் தாரம் நான்காம் தாரம் என்பதெல்லாம் இப்போது ஒரு மேட்டரே இல்லை என் அதிரடியாய் பதில் கூறி ரசிகர்களின் வாயை அடைத்தார் நேகா.
பெரிய விஷயமில்லை
இந்நிலையில் மேலும் இதுகுறித்து பேசிய நேகா இரண்டுமுறை திருமணம் ஆன ஒருவரை மணந்துகொள்வது பெரிய விஷயமில்லை என கூறியுள்ளார்.
நானே விர்ஜின் இல்லை
அதோடு நானே விர்ஜின் இல்லை, அதாவது தான் கன்னித்தன்மை கொண்டவர் இல்லை என்று கூறி குண்டைத் தூக்கிப்போட்டிருக்கிறார் நேகா. தானே விர்ஜின் இல்லை எனும் போது தன்னை திருமணம் செய்துகொள்பவர் மட்டும் விர்ஜினாக இருக்கவேண்டும் என்று எப்படி எதிர்பார்ப்பது? என்றும் கூறியிருக்கிறார்.

எனக்கு தெரியும்
ஷர்துல் ஏற்கனவே இரண்டுமுறை திருமணம் ஆனவராக இருந்தாலும் அவரை எப்படி பார்த்துக்கொள்வது என்பது தனக்கு தெரியும் என்றும் கூறியிருக்கிறார்.

பரபரப்பு
திருமணம் ஆகி 10 நாட்கள் கூட ஆகவில்லை, அதற்குள் அவர் தனது கன்னித்தன்மை குறித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











