Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மீண்டும் இந்தியாவுக்கேத் திரும்புகிறேன்- மாதுரி தீட்சித்
44 வயதாகும் மாதுரி தீட்சித் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இந்தித் திரையுலகைக் கலக்கியவர். மிகச் சிறந்த நடனக்கலைஞராக, அட்டகாசமான நடிகையாக அறியப்பட்டவர். ஐஸ்வர்யா ராயின் எழுச்சிக்கு முன்னர் மாதுரியின் நடிப்பிலும், நடனத்திலும் மயங்கிக் கிடந்தனர் இந்தித் திரையுலக ரசிகர்கள்.
1999ம் ஆண்டு அமெரிக்காவின் டென்வரில் வசித்து வரும் டாக்டர் ஸ்ரீராம் மாதவ் நெனேவை மணந்து கொண்டு அமெரிக்காவில் போய் செட்டிலானார் மாதுரி.
இரு குழந்தைகளுக்குத் தாயான மாதுரி தொடர்ந்து அமெரிக்காவிலேயே வசித்து வந்தார். இந்த நிலையில், தற்போது மீண்டும் இந்தியாவுக்கேத் திரும்பவுள்ளாராம். இங்கு ஒரு டிவியில் ஒளிபரப்பாகவுள்ள நடனத்தை அடிப்படையாகக் கொண்ட ரியாலிட்டி ஷோவில் நடுவராக பணியாற்றும் மாதுரி, தனக்கும், தனது குடும்பத்துக்கும் வசதியாக, இந்தியாவிலேயே தங்கி விட தீர்மானித்துள்ளாராம்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், எனது ரசிகர்களுக்கு, நாங்கள் இந்தியாவுக்கேத் திரும்பவுள்ளோம். மீண்டும் தாயகம் திரும்புவது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு நடிக்காமல் இருந்த மாதுரி 2007ல் ஆஜா நச்லே என்ற படத்தில் மீண்டும் நடித்தார். இப்போது அவரைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. இதை மனதில் கொண்டுதான் மீண்டும் இந்தியாவுக்கு வரும் முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிகிறது.